என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு
    X

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு

    • பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது.
    • 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

    பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×