search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கே.கே.நகர் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் பலி

    கே.கே.நகர் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கே.கே. நகர் ராணி அண்ணா நகர் குடியிருப்பில் வசித்து வந்தவர் அந்தோணி (வயது 30). இவர் கடந்த 2 மாதங்களாக வடபழனி போலிஸ் நிலையத்தில் "பிரண்ட்ஸ் ஆப் போலிசாக" வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பின் 3-வது மாடிக்கு சென்றார்.

    தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்ற அந்தோணி தண்ணீர் உள்ளதா? என்று எட்டி பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்த அந்தோணியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்தோணி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×