என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் மனைவி கொலை - கணவர் வெறிச்செயல்
Byமாலை மலர்4 Feb 2020 9:42 AM GMT (Updated: 4 Feb 2020 9:42 AM GMT)
தஞ்சாவூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த ரேசன் கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த அம்மாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 34). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் தான் ஆகிறது.
இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திவ்யாவை ரகுபதி திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அம்மா குளத்தில் தனிகுடித்தனம் வசித்தார். பின்னர் தன் பெற்றோர் வீட்டில் திவ்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் திவ்யாவிடம் ரகுபதி மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரகுபதி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த திவ்யா மீது பெரிய கல்லை போட்டார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே திவ்யா பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். உடனடியாக அவர்கள் இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரகுபதியை கைது செய்தனர். அவரிடம் எதற்காக திவ்யாவை கொலை செய்தார்? வரதட்சணை கொடுமையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 மாதமே ஆவதால் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகின்றார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையை அடுத்த அம்மாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 34). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் தான் ஆகிறது.
இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திவ்யாவை ரகுபதி திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அம்மா குளத்தில் தனிகுடித்தனம் வசித்தார். பின்னர் தன் பெற்றோர் வீட்டில் திவ்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் திவ்யாவிடம் ரகுபதி மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரகுபதி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த திவ்யா மீது பெரிய கல்லை போட்டார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே திவ்யா பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். உடனடியாக அவர்கள் இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரகுபதியை கைது செய்தனர். அவரிடம் எதற்காக திவ்யாவை கொலை செய்தார்? வரதட்சணை கொடுமையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 மாதமே ஆவதால் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகின்றார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X