என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதலூரில் பனைமரத்தில் கார் மோதல்- சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்7 Jan 2020 5:05 AM GMT (Updated: 7 Jan 2020 6:32 AM GMT)
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே சாலையோரம் இருந்த பனைமரத்தில் கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பூதலூர்:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கலிமா நகரை சேர்ந்தவர் ஈரூஸ்மரக்காயர் (வயது 44). இவர் கடலூரில் சூப்பர்மார்க்கெட் நடத்தி வருகிறார்.
இவர் நேற்று காரில் சீர்காழி அருகே திருமுல்லை வாசல் பகுதியை சேர்ந்த சேக்தாவூத் (44), அப்துல்ரசாக் (42), ஜவர்ருதீன் (44) ஆகியோருடன் கேரளாவிற்கு புறப்பட்டு வந்துள்ளார்.
தஞ்சையை அடுத்த பூதலூர் அருகே உள்ள கல்லணை சாலையில் அதிகாலை கார் சென்று கொண்டிருந்த போது காரை ஓட்டிவந்த ஈரூஸ்மரக்காயர் கண்அயர்ந்ததால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பனைமரத்தில் வேகமாக கார் மோதி உள்ளது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஈரூஸ் மரக்காயர், சேக்தாவூத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த இருவரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மரத்தில் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கலிமா நகரை சேர்ந்தவர் ஈரூஸ்மரக்காயர் (வயது 44). இவர் கடலூரில் சூப்பர்மார்க்கெட் நடத்தி வருகிறார்.
இவர் நேற்று காரில் சீர்காழி அருகே திருமுல்லை வாசல் பகுதியை சேர்ந்த சேக்தாவூத் (44), அப்துல்ரசாக் (42), ஜவர்ருதீன் (44) ஆகியோருடன் கேரளாவிற்கு புறப்பட்டு வந்துள்ளார்.
தஞ்சையை அடுத்த பூதலூர் அருகே உள்ள கல்லணை சாலையில் அதிகாலை கார் சென்று கொண்டிருந்த போது காரை ஓட்டிவந்த ஈரூஸ்மரக்காயர் கண்அயர்ந்ததால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பனைமரத்தில் வேகமாக கார் மோதி உள்ளது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஈரூஸ் மரக்காயர், சேக்தாவூத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த இருவரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மரத்தில் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X