search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் (கோப்புப்படம்)
    X
    ரெயில் (கோப்புப்படம்)

    சென்னை-நாகர்கோவில் 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.425

    சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் கன்னியாகுமரி விரைவு ரெயிலில் தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு டிக்கெட் ரூ.425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது முந்தய கட்டணத்தைவிட ரூ.15 அதிகம்.
    சென்னை:

    ரெயில் கட்டண உயர்வு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இதன்படி தூங்கும் வசதி கொண்ட சாதாரண ரெயில்களில் முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு பயண கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி. இல்லாத மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி முதல் வகுப்பு ஆகியவற்றுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது.

    ஏ.சி. வகுப்புகளில் சேர் கார், 3 அடுக்கு, 2 அடுக்கு முதல் வகுப்பு ஆகியவற்றுக்கான பயண கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்பட்டிருக்கிறது. சதாப்தி, ராஜதானி, தூரந்தோ உள்ளிட்ட பிரிமியம் ரெயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் முன்பதிவு சேவைக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. புறநகர் ரெயில் கட்டணம் உயரவில்லை. புறநகர், புறநகர் அல்லாத ரெயில்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை.

    சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் கன்னியாகுமரி விரைவு ரெயிலில் தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு டிக்கெட் ரூ.425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது முந்தய கட்டணத்தைவிட ரூ.15 அதிகம்.

    3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்வதற்கான டிக்கெட் ரூ.30 உயர்ந்து ரூ.1,110 ஆகி இருக்கிறது. 2 அடுக்கு ஏ.சி. வகுப்பு டிக்கெட் ரூ.1,565 ஆகி இருக்கிறது. இது ரூ.35 அதிகமாகும்.

    சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரெயிலில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கு பயண டிக்கெட் ரூ.10 உயர்ந்து ரூ.395 ஆகி இருக்கிறது. 3 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு ரூ.30 அதிகரித்து ரூ.1,040 ஆகவும், 2 அடுக்கு ஏ.சி. வகுப்புக்கு ரூ.30 அதிகரித்து ரூ.1,460 ஆகவும் உள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட டிக்கெட் ரூ.325 ஆகி இருக்கிறது. இது ரூ.10 உயர்வு. 3 அடுக்கு ஏ.சி. ரூ.20 அதிகரித்து ரூ.835 ஆகவும், இரண்டு அடுக்கு ஏ.சி. ரூ.20 உயர்ந்து ரூ.1,170 ஆகவும், முதல் வகுப்பு ஏ.சி. ரூ.20 அதிகரித்து ரூ.1,960 ஆகவும் உள்ளது.

    மதுரைக்கு பகல் நேரத்தில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிட்டிங் வகுப்பு ரூ.10 அதிகரித்து ரூ.190 ஆகவும், ஏ.சி. சேர்கார் வகுப்பு கட்டணம் ரூ.20 உயர்ந்து ரூ.685 ஆகவும் இருக்கிறது.

    சென்னை- தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டணம் ரூ.10 அதிகரித்து ரூ.395 ஆகி இருக்கிறது. மூன்று அடுக்கு ஏ.சி. கட்டணம் ரூ.1,040 ஆகவும், 2 அடுக்கு ஏ.சி. கட்டணம் ரூ.1,460 ஆகவும் மாறி இருக்கிறது. இது தலா ரூ.30 அதிகம். சென்னை -செங்கோட்டை பொதிகை விரைவு ரெயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட ரெயிலில் பயண கட்டணம் ரூ.15 அதிகரித்து ரூ.400 ஆகவும்.

    3 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு ரூ.25 உயர்ந்து டிக்கெட் கட்டணம் ரூ.1,045 ஆகவும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு ரூ.30 அதிகரித்து ரூ.1,475 ஆகவும் இருக்கிறது.

    சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் கட்டணம் ரூ.10 உயர்ந்து ரூ.325 ஆகி இருக்கிறது. மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டி டிக்கெட் கட்டணம் ரூ.20 அதிகரித்து ரூ.835 ஆகவும், 2 அடுக்கு ஏ.சி.பெட்டி கட்டணம் ரூ.20 உயர்ந்து ரூ.1,170 ஆகவும் உள்ளது.

    சென்னை- திருச்சி மலைக்கோட்டை விரைவு ரெயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கு ரூ.10 கட்டணம் உயர்ந்து ரூ.225 ஆகவும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு ரூ.15 உயர்ந்து ரூ.645 ஆகவும், இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் ரூ.15 அதிகரித்து ரூ.895 ஆகி இருக்கிறது.

    சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ராமேஸ்வரம் விரைவு ரெயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட வகுப்பு கட்டணம் ரூ.10 அதிகரித்து ரூ.370 ஆகி இருக்கிறது.

    3-ம் அடுக்கு ஏ.சி. பெட்டி கட்டணம் ரூ.1,365 ஆகவும், 2 அடுக்கு ஏ.சி. பயண கட்டணம் ரூ.2,285 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தலா ரூ.25 அதிகமாகும்.
    Next Story
    ×