என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீர்ப்பிடிப்பில் விடிய விடிய மழை - மூல வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
Byமாலை மலர்21 Nov 2019 6:36 AM GMT (Updated: 21 Nov 2019 6:36 AM GMT)
நீர்ப்பிடிப்பு பகுதியில் விடிய விடிய பெய்த மழையினால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. ஆண்டிப்பட்டி தாலுகா மற்றும் வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, அரசரடி, வருஷநாடு ஆகிய பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக முல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 128.40 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று காலை 129 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று 1478 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3095 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4482 மி.கன அடியாக உள்ளது.
இதே போல் வைகை அணையின் நீர்மட்டமும் 59.61 அடியாக உள்ளது. வரத்து 1983 கன அடி. திறப்பு 1560 கன அடி. இருப்பு 3531 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.60 அடி. வரத்து 17 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.77 அடி. வரத்து 229 கன அடி. திறப்பு 30 கன அடி.
பெரியாறு 8.8, தேக்கடி 25, கூடலூர் 17, சண்முகா நதி அணை 5, உத்தமபாளையம் 0.2, வீரபாண்டி 11, வைகை அணை 26, மஞ்சளாறு 16, சோத்துப்பாறை 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. ஆண்டிப்பட்டி தாலுகா மற்றும் வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, அரசரடி, வருஷநாடு ஆகிய பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக முல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 128.40 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று காலை 129 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று 1478 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3095 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4482 மி.கன அடியாக உள்ளது.
இதே போல் வைகை அணையின் நீர்மட்டமும் 59.61 அடியாக உள்ளது. வரத்து 1983 கன அடி. திறப்பு 1560 கன அடி. இருப்பு 3531 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.60 அடி. வரத்து 17 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.77 அடி. வரத்து 229 கன அடி. திறப்பு 30 கன அடி.
பெரியாறு 8.8, தேக்கடி 25, கூடலூர் 17, சண்முகா நதி அணை 5, உத்தமபாளையம் 0.2, வீரபாண்டி 11, வைகை அணை 26, மஞ்சளாறு 16, சோத்துப்பாறை 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X