search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு மிரட்டல் - கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

    தஞ்சை அருகே வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தது குறித்து கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் ரோட்டில் உள்ள வடக்கு லாயத்தை சேர்ந்தவர் பரமேஷ்குமார் (வயது 44). தொழிலாளி. இவரது மனைவி சுமதி (40). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் சுமதியிடம் உங்கள் வீட்டிற்கு சென்று வரதட்சணை பணம் வாங்கி கொடு என்று பரமேஷ்குமார் அடிக்கடி கேட்டு வந்தார். இதில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று பரமேஷ் குமார், அவரது தந்தை அமிர்தலிங்கம், சகோதரி தவமணி உள்பட 5 பேர் சேர்ந்து வரதட்சணை பணம் கேட்டு சுமதியை மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து சுமதி தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பரமேஷ் குமார், அமிர்தலிங்கம், தவமணி, சங்கீதா ,துரைகுமார் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×