search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணிச்சலுடன் பாம்பை பிடிக்கும் இளைஞர் ராஜேஷ்.
    X
    துணிச்சலுடன் பாம்பை பிடிக்கும் இளைஞர் ராஜேஷ்.

    முத்துப்பேட்டை: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 6 அடி நீள சாரைப்பாம்புகள்

    முத்துப்பேட்டையில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 6 அடி நீள சாரைப்பாம்புகளை வாலிபர் துணிச்சலுடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்கா வெளிதோப்பு, ரஹ்மத் நகர், கருமாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகள் அருகருகே உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. புதியதாக அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதிகள் நடுவே கருவை காடுகளும் உள்ளன. இதனை ஒட்டி ரெயில் நிலையம் மற்றும் ரெயில் பாதையும் கடந்து செல்கிறது.

    கடந்த ஆண்டு ரெயில் நிலையம் சீரமைப்பு மற்றும் அகல ரெயில்பாதை பணிகள் நடந்தது. இந்த பணியின் போது ஏராளமான பாம்புகள், வி‌ஷ ஜந்துக்கள் அங்கிருந்து தப்பி குடியிருப்புகள் நடுவே உள்ள கருவை காடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி குடியிருப்பு பகுதியில் கொடிய பாம்புகள் சுற்றித்திரிந்து வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். . மேலும் பலர் வீடுகளுக்குள் பாம்புகள் புகுராமல் இருக்க வீடுகள் சுற்றிலும் உள்ள வேலிகளில் வலை கட்டி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மருதங்கா வெளிதோப்பு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் வீட்டை சுற்றி வேலியில் கட்டப்பட்டு இருந்த வலையில் நேற்று சுமார் 6 அடி நீளம் கொண்ட இரண்டு சாரைப் பாம்புகள் சிக்கியது. இதில் இரண்டு பாம்புகளும் ஒன்றோடொன்று வலையுடன் பின்னி தப்பிக்க முயன்றது. ஆனாலும் அதன் முயற்சி பயனில்லை. இந்த செய்தி பரவியதும் அங்கு ஏராளமான கூட்டம் கூடியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அங்கு வந்த ராஜேஷ், என்ற இளைஞர் பாம்பை உயிருடன் பிடிக்க முயற்சி மேற்கொண்டார். இதில் துணிச்சலுடன் களமிறங்கிய ராஜேஷ் வலையில் சிக்கிய இரு பாம்பையும் பயமின்றி சாதூரியமாக உயிருடன் பிடித்து சாக்கு பைக்குள் போட்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் துணிச்சலுடன் பாம்பை பிடித்த ராஜேசை பாராட்டினர். இதனையடுத்து அங்கு வந்த வன காவலர் ராம ஜெயத்திடம் உயிருடன் பிடிபட்ட பாம்பை ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் அச்சுறுத்தி வந்த சாரை பாம்பை உயிருடன் பிடித்து ஒப்படைத்த அப்பகுதி மக்களை முத்துப்பேட்டை வனசரக அலுவலர் தாஹீர் அலி பாராட்டினார். மேலும் பிடிப்பட்ட பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக காட்டு பகுதியில் விட்டனர்.

    Next Story
    ×