search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கும்மிடிப்பூண்டியில் வீட்டுக்குள் கொத்தனார் வெட்டிகொலை- மனைவியிடம் விசாரணை

    கும்மிடிப்பூண்டியில் வீட்டுக்குள் கொத்தனார் வெட்டிகொலை செய்யப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள செங்கல் சூளைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் முருகன் (வயது 34). கொத்தனார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், தாட்சாயிணி என்ற மகளும் உள்ளனர். நேற்று இரவு  முருகன் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட போலீசார் ஆரம் பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் முருகன் பாயில் படுத்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது தலையின் பின்பக்கத்தில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது. அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து தப்பி இருப்பது தெரிந்தது. இதுபற்றி வீட்டில் இருந்த அவரது மனைவி தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டுக்குள் கணவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தெரிவித்தார்.

    அவர் தொடர்ந்து, முன்னுப்பின் முரணாக தகவல் தெரிவித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேவியிடம் தீவிர விசாரனணை நடந்து வருகிறது. தேவிக்கும் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை முருகன் கண்டித்து வந்ததாக தெரிகிறது.

    எனவே கள்ளக்காதலை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் முருகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனறு போலீசார் கருதுகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×