என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன அதிபர் வரும் நேரத்தில் சின்னமலை-மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் நிறுத்தப்படும்
Byமாலை மலர்10 Oct 2019 6:09 AM GMT (Updated: 10 Oct 2019 9:23 AM GMT)
சீன அதிபர் வரும் நேரத்தில் சின்னமலை முதல் மீனம்பாக்கம் வரையில் மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படும் என தெரிகிறது.
சென்னை:
சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 1.45 மணிக்கு செல்கிறார்.
சீன அதிபர் வரும் நேரத்தில் விமான நிலையத்தையொட்டி அமைந்துள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இறங்கி அவர் ஓட்டல் செல்லும் வரை அதாவது 1.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ரெயில்கள் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
இதனால் மெட்ரோ ரெயில் சேவையும் தாமதமாகும். குறிப்பாக சீன அதிபர் வரும் நேரத்தில் சின்னமலை முதல் மீனம்பாக்கம் வரையில் மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படும் என தெரிகிறது.
சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சின்ன மலை முதல் கிண்டி வரை கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிபில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும் பறக்கும் ரெயில் சேவை மற்றும் புறநகர் மின்சார ரெயில் சேவையிலும் சிறிதுநேரம் நிறுத்தப்படலாம் என தெரிகிறது. சீன அதிபருடன் வரும் பிரதிநிதிகள் செல்ல வசதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 1.45 மணிக்கு செல்கிறார்.
சீன அதிபர் வரும் நேரத்தில் விமான நிலையத்தையொட்டி அமைந்துள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இறங்கி அவர் ஓட்டல் செல்லும் வரை அதாவது 1.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ரெயில்கள் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
இதனால் மெட்ரோ ரெயில் சேவையும் தாமதமாகும். குறிப்பாக சீன அதிபர் வரும் நேரத்தில் சின்னமலை முதல் மீனம்பாக்கம் வரையில் மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படும் என தெரிகிறது.
சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சின்ன மலை முதல் கிண்டி வரை கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிபில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும் பறக்கும் ரெயில் சேவை மற்றும் புறநகர் மின்சார ரெயில் சேவையிலும் சிறிதுநேரம் நிறுத்தப்படலாம் என தெரிகிறது. சீன அதிபருடன் வரும் பிரதிநிதிகள் செல்ல வசதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X