search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வில்லிவாக்கம் கார் டிரைவர் கொலையில் 4 பேர் கைது

    வில்லிவாக்கம் கார் டிரைவர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம், பாலராமபுரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42) கார் டிரைவர்.

    நேற்று முன்தினம் இரவு அவர் வில்லிவாக்கம் சிந்தாமணி கடை அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் பாஸ்கரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து வில்லிவாக்கம் உதவி கமி‌ஷனர் அகஸ்டின் பால் சுதாகர் உத்தரவின்படி இன்ஸ்பெக்டரப் ரத்தீஷ் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பழிக்கு பழியாக பாஸ்கர் தீர்த்துக்கட்டப்பட்டு இருப்பது தெரிந் தது.

    கொலையுண்ட பாஸ்கர், ரெயில் சங்க தலைவர் புதியவன் என்பவருக்கு கார் டிரைவராக இருந்தார். அப்போது இவரது தம்பிக்கு ரெயில்வே வேலை வாங்கித் தருவதாக புதியவன் பணம் வாங்கியதாக கூறப்பட்டது.

    ஆனால் அவர் வேலை வாங்கி கொடுக்காததால் கோபம் அடைந்த பாஸ்கர் தனது கூட்டளிகளுடன் சேர்ந்து கடந்த ஆண்டு வீட்டுக்குள் புகுந்து புதியவனை கொலை செய்தார்.

    இந்த வழக்கில் பாஸ்கர் சிறைக்கு செல்வதற்கு முன்பு புதியவனின் மனைவி மற்றும் அவரது மைத்துனர் சுபாஷ் ஆகியோரிடம் பணத்தை திருப்பி தராவிட்டால் ஜெயிலில் இருந்து வந்த பின்னர் 2 பேரையும் தீர்த்துக் கட்டுவதாக மிரட்டி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்னர் பாஸ்கர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் தற்போது வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக புதியவனின் உறவினர்கள் சுபாஷ், அவரது தம்பி சுகன், அவர்களது நண்பர்கள் கேசவமூர்த்தி, ஜெயான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கூட்டாளிகள் யார்-யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×