search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நெல்லை அருகே சுயஉதவிக்குழு பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

    நெல்லை அருகே காதலன் ரூ.10 லட்சம் மோசடி செய்ததால் சுயஉதவிக்குழு பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த பருத்திகுளத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகள் பரமேஸ்வரி (வயது24). இவர் சுயஉதவிக்குழுவில் இருந்து பணத்தை பிரித்து வங்கியில் கட்டும் பணி செய்து வந்தார். இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பணத்தை வசூல் செய்து வங்கியில் செலுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் பரமேஸ்வரிக்கும், பாளை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (28) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அந்தோணி ராஜ் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு பரமேஸ்வரியை அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது அவரிடம் வசூல் பணம் இருந்ததை தெரிந்து கொண்டார். இதைத்தொடர்ந்து தனது குடும்ப செலவுக்கு அவசரமாக ரூ.10 லட்சம் தேவைப் படுவதாகவும், எனவே இதனை கடன் தருமாறும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார்.

    இதனை நம்பி பரமேஸ்வரியும் கடன் கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் அவர் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து பரமேஸ்வரி, அந்தோணிராஜிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். எனினும் அவர் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்கள் பரமேஸ்வரி வங்கியில் பணம் செலுத்தவில்லை என்பதை அறிந்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்று உடனடியாக பணத்தை செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி தனது உறவினர்களை அழைத்து கொண்டு அந்தோணிராஜிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் பரமேஸ்வரியிடம் இருந்து பணம் வாங்கவில்லை என்றும், அவரை திருமணம் செய்ய முடியாது என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பரமேஸ்வரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து விட்டார். இன்று காலை நீண்ட நேரமாக அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த சுடலைமுத்து அவரை எழுப்பியுள்ளார்.

    அப்போது வி‌ஷம் குடித்த நிலையில் பரமேஸ்வரி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தோணி ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×