என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்தது - போக்குவரத்து பாதிப்பு
Byமாலை மலர்19 Aug 2019 5:12 AM GMT (Updated: 19 Aug 2019 5:12 AM GMT)
ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே இன்று காலை ராட்சத பாறை ஒன்று உருண்டு சாலையில் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றிரவும் பரவலாக மழை பெய்தது.
இதில் சேலம் மாநகர், காடையாம்பட்டி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையால் ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே பாறைகள் சாலையில் உருண்டு விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டது.
ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே இன்று காலை ராட்சத பாறை ஒன்று உருண்டு சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்துறையினனர் துரிதமாக செயல்பட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாறைகளை அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கடையாம்பட்டியில் 32.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 24.5, ஏற்காடு 26.6, சங்ககிரி 4.1, ஓமலூர் 4, ஆத்தூர் 3.4, மேட்டூர் 2.8, கரியகோவில் 2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 100.1 மி.மீ. மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றிரவும் பரவலாக மழை பெய்தது.
இதில் சேலம் மாநகர், காடையாம்பட்டி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையால் ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே பாறைகள் சாலையில் உருண்டு விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டது.
ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே இன்று காலை ராட்சத பாறை ஒன்று உருண்டு சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்துறையினனர் துரிதமாக செயல்பட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாறைகளை அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கடையாம்பட்டியில் 32.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 24.5, ஏற்காடு 26.6, சங்ககிரி 4.1, ஓமலூர் 4, ஆத்தூர் 3.4, மேட்டூர் 2.8, கரியகோவில் 2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 100.1 மி.மீ. மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X