search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    அவரால் பூமிக்குத்தான் பாரம்- ப.சிதம்பரத்தை கடுமையாக சாடிய தமிழக முதல்வர்

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தால் பூமிக்குத்தான் பாரம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கினார்.
    சேலம்:

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டபின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

    ப.சிதம்பரம்

    ‘மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைகட்டி, வாய்புதைத்து, தலைவணங்கி நிற்கும்’ என ப.சிதம்பரம் கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ப.சிதம்பரத்தை கடுமையாக சாடினார். 

    “ப.சிதம்பரத்தால் தமிழகத்திற்கும் நாட்டிற்கும் என்ன கிடைத்தது? அவரால் பூமிக்குத்தான் பாரம்” என்றார் எடப்பாடி பழனிசாமி.
    Next Story
    ×