என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் சாரல் மழை- ஏற்காட்டில் கடும் குளிரால் மக்கள் அவதி
Byமாலை மலர்7 Aug 2019 4:28 AM GMT (Updated: 7 Aug 2019 5:07 AM GMT)
சேலம் மாவட்டம் முழுவதும் இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியான சூழல் நிலவி வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, கோரிமேடு, 4 ரோடு, ஜங்சன், செவ்வாய்ப்பேட்டை உள்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையை அடுத்து மாநகர் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர்.
ஏற்காட்டில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகலில் சாரல் மழை பெய்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எறிய விட்ட படியே சென்றன.
ஏற்காடு மலையில் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் வீட்டில் முடங்கினர். சுற்றுலா பயணிகளும் ஓட்டல் அறையில் முடங்கினர். இதனால் அண்ணா பூங்கா, படகுகுழாம், சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் என அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் மாவட்டம் முழுவதும் இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியான சூழல் நிலவி வருகிறது.
மாவட்டத்தில அதிக பட்சமாக ஏற்காட்டில் 8.4 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலத்தில் 3.2, ஆத்தூர், தம்மம்பட்டியில் 2.2, சங்ககிரி, ஆனைமடுவில் 2, மேட்டூர், காடையாம்பட்டி 1.8, வாழப்பாடி, ஓமலூரில் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, கோரிமேடு, 4 ரோடு, ஜங்சன், செவ்வாய்ப்பேட்டை உள்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையை அடுத்து மாநகர் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர்.
ஏற்காட்டில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகலில் சாரல் மழை பெய்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எறிய விட்ட படியே சென்றன.
ஏற்காடு மலையில் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் வீட்டில் முடங்கினர். சுற்றுலா பயணிகளும் ஓட்டல் அறையில் முடங்கினர். இதனால் அண்ணா பூங்கா, படகுகுழாம், சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் என அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் மாவட்டம் முழுவதும் இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியான சூழல் நிலவி வருகிறது.
மாவட்டத்தில அதிக பட்சமாக ஏற்காட்டில் 8.4 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலத்தில் 3.2, ஆத்தூர், தம்மம்பட்டியில் 2.2, சங்ககிரி, ஆனைமடுவில் 2, மேட்டூர், காடையாம்பட்டி 1.8, வாழப்பாடி, ஓமலூரில் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X