என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மரக்காணம் அருகே விபத்து - 2 வாலிபர்கள் பலி
மரக்காணம்:
புதுவை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் மோகன் (25). இவர்கள் 2 பேரும் இன்று காலை புதுவையிலிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டனர்.
மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக வந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பனைமரத்தில் வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அருண்குமார், ஜெகன் மோகன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான 2 வாலிபர்களின் உடலை கைப்பற்றி புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்