search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்- மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு
    X

    பாராளுமன்ற தேர்தல்- மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். #makkalneedhimaiamparty #kamalannouncescandidates
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்று வந்தார்.



    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடவிருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் இன்று வெளியிட்டுள்ளார். வேட்பாளர்கள் பெயர் வருமாறு:-

    அரக்கோணம்-என். நாகேந்திரன், வேலூர்-ஆர். சுரேஷ், கிருஷ்ணகிரி- காருண்யா, தர்மபுரி-வழக்கறிஞர் ராஜசேகரன், விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி, சேலம் -என் பிரபு மணிகண்டன், நீலகிரி -வழக்கறிஞர்  ராஜேந்திரன், திண்டுக்கல்- டாக்டர் சுதாகர், திருச்சி- வி. ஆனந்தராஜா, மத்திய சென்னை- கமிலா நாசர், சிதம்பரம்- ரவி, மயிலாடுதுறை- ரிபைதின், நாகை- குருவையா, தேனி- வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி- பொன் குமரன், திருநெல்வேலி- வெண்ணிமலை, கன்னியாகுமரி-எபிநேசன், புதுச்சேரி-எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், திருவள்ளூர் - லோக ரங்கன், வடசென்னை- ஏஜி மவுரியா, ஸ்ரீபெரும்புதூர்- என் சிவக்குமார்.

    முதற்கட்டமாக 21 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற வேட்பாளர்கள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். #makkalneedhimaiamparty #kamal

    Next Story
    ×