என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
28, 18 சதவீத ஜி.எஸ்.டி.யை முழுவதும் நீக்க வேண்டும் - விக்கிரமராஜா
சேலம்:
சேலம் லீ பசார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
36-வது வணிகர் சங்க மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மகாலில் விரைவில் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி எங்களது கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற மாநாட்டில் வலியுறுத்தப்படும்.
ஜி.எஸ்.டி. பாதிப்பில் இருந்து மீண்டு வர 28 மற்றும் 18 சதவீத வரிகளை முற்றிலும் நீக்க வேண்டும், ஜி.எஸ்.டி. மூலம் வசூல் செய்து எங்களுக்கு திருப்பி தர வேண்டிய 96 ஆயிரம் கோடியை திருப்பி தர வேண்டும், மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகளை புறந்தள்ளி வருகிறது.
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கோரிக்கைகளை உறுதி மொழியாக எழுதி கொடுப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
1 கோடிக்கும் அதிகமானோர் வியாபாரத்தை நம்பி உள்ளனர். 60 வயதை கடந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பிளாஸ்டிக் தடையில் அத்துமீறும் அதிகாரிகளை எதிர்த்து போராடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார். #Vikramaraja #GST
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்