என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை கடற்படையினரால் பிடிபட்ட தமிழக மீனவர்கள் 27 பேர் மதுரை வருகை
Byமாலை மலர்4 Sep 2018 7:56 AM GMT (Updated: 4 Sep 2018 7:56 AM GMT)
இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்கள் இன்று மதுரை வந்தனர். பின்னர் அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு வேன் மூலம் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #TNFishermen
அவனியாபுரம்:
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், ராமநாதபுரம் நம்புதாளை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து நாட்டு படகில் மீன்பிடிக்க சென்ற 27 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் நாகப்பட்டினத்தில் இருந்து 4 மீனவர்கள், புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தில் இருந்து 2 மீனவர்கள், ராமநாதபுரம் நம்புதாளையில் இருந்து 21 மீனவர்கள் இலங்கையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந் தனர்.
இவர்களை வரவேற்க தமிழக மீன்வளத்துறை ராமநாதபுரம் இணை இயக்குநர் காத்தவராயன், திருச்சி இணை இயக்குநர் செல்லகுமார் ஆகியோர் மதுரை விமான நிலையம் வந்தனர்.
மீனவர்கள் கூறியதாவது:
கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் பிடிபட்ட எங்களை விடுவித்ததற்கு இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களிடமிருந்து 4 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
இதில் 3 நாட்டு படகு மற்றும் 1 பைபர் படகு உள்ளது. இந்த படகுகளை மீட்க அரசு வழிவகைசெய்ய வேண்டும். தமிழக அரசும் எங்களுக்கு உதவி செய்தது.
இலங்கை கடற்படையினர் எங்களை துன்புறுத்தவில்லை என்றனர்.
பின்னர் மீனவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு அவர்கள் வேன் மூலம் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #TNFishermen
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், ராமநாதபுரம் நம்புதாளை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து நாட்டு படகில் மீன்பிடிக்க சென்ற 27 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் நாகப்பட்டினத்தில் இருந்து 4 மீனவர்கள், புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தில் இருந்து 2 மீனவர்கள், ராமநாதபுரம் நம்புதாளையில் இருந்து 21 மீனவர்கள் இலங்கையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந் தனர்.
இவர்களை வரவேற்க தமிழக மீன்வளத்துறை ராமநாதபுரம் இணை இயக்குநர் காத்தவராயன், திருச்சி இணை இயக்குநர் செல்லகுமார் ஆகியோர் மதுரை விமான நிலையம் வந்தனர்.
மீனவர்கள் கூறியதாவது:
கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் பிடிபட்ட எங்களை விடுவித்ததற்கு இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களிடமிருந்து 4 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
இதில் 3 நாட்டு படகு மற்றும் 1 பைபர் படகு உள்ளது. இந்த படகுகளை மீட்க அரசு வழிவகைசெய்ய வேண்டும். தமிழக அரசும் எங்களுக்கு உதவி செய்தது.
இலங்கை கடற்படையினர் எங்களை துன்புறுத்தவில்லை என்றனர்.
பின்னர் மீனவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு அவர்கள் வேன் மூலம் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #TNFishermen
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X