என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிவு
Byமாலை மலர்3 Sep 2018 6:20 AM GMT (Updated: 3 Sep 2018 6:20 AM GMT)
கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. #MetturDam
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது.
இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.
கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை 2 ஆயிரத்து 886 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது. நேற்று 20 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 14 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.
நேற்று 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டு நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல் அருவிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
வழக்கமான பாதையில் பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது.
இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.
கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை 2 ஆயிரத்து 886 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது. நேற்று 20 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 14 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.
நேற்று 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டு நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல் அருவிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
வழக்கமான பாதையில் பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X