என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக சரிவு
Byமாலை மலர்28 Aug 2018 4:43 AM GMT (Updated: 28 Aug 2018 4:43 AM GMT)
மேட்டூர் அணைக்கு நேற்று 28 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர் வரத்து 22 ஆயிரம் கன அடியாக சரிந்தது. #Metturdam #Cauvery
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மீண்டும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.
நேற்று 2 அணைகளில் இருந்தும் 36 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று 28 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர் வரத்து 22 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து நேற்று 27 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்த விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 20 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.05 அடியாக இருந்தது.
கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு இன்று மேலும் குறைக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 31 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 23 ஆயிரம் கன அடியாக சரிந்தது. மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. முதலைப் பண்ணை, நாகர்கோவில் உள்பட பகுதிகளில் காவிரி கரையோரம் சுற்றுலா பகுதிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கமான பாதை யில் இன்று காலை முதல் பரிசல் இயக்க அனுமதிக்கப் பட்டதால் சுற்றுலா பயணி கள் உற்சாகமாக பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #Metturdam #Cauvery
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மீண்டும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.
நேற்று 2 அணைகளில் இருந்தும் 36 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று 28 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர் வரத்து 22 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து நேற்று 27 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்த விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 20 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.05 அடியாக இருந்தது.
கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு இன்று மேலும் குறைக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 31 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 23 ஆயிரம் கன அடியாக சரிந்தது. மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. முதலைப் பண்ணை, நாகர்கோவில் உள்பட பகுதிகளில் காவிரி கரையோரம் சுற்றுலா பகுதிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கமான பாதை யில் இன்று காலை முதல் பரிசல் இயக்க அனுமதிக்கப் பட்டதால் சுற்றுலா பயணி கள் உற்சாகமாக பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #Metturdam #Cauvery
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X