search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவ் ஆனந்த்
    X
    தேவ் ஆனந்த்

    கேரள வெள்ளத்தில் சிக்கி புதுவை போலீஸ் ஏட்டு பலி

    கேரள மழை வெள்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு தேவ் ஆனந்த் பலியான சம்பவம் புதுவை போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Keralasouthwestmonsoon #Keralarain

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் கட்டுப்பாட்டு அறை பிரிவில் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வருபவர் தேவ் ஆனந்த் (வயது 44). இவர் கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இவரது சொந்த ஊர் கேரள மாநிலத்தில் உள்ள புதுவை பிராந்தியமானமாகி ஆகும். இவர், கடந்த 16-ந் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரானமாகிக்கு புறப்பட்டு சென்றார்.

    மழை வெள்ளம் காரணமாக கேரளாவுக்கு அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் ஈரோட்டில் இருந்து கோவை வழியாக பஸ்சில் பாலக்காடு சென்றார். பின்னர் பஸ்சில் குடும்பத்தினரை அமர வைத்து விட்டு உணவு வாங்குவதற்காக தேவ் ஆனந்த் இறங்கி சென்றார்.

    ஆனால், வெகுநேர மாகியும் தேவ் ஆனந்த் வரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மட்டும் மாகி சென்றனர். அதன் பிறகும் தேவ் ஆனந்த் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் இது பற்றி பாலக்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பாலக்காட்டில் ஒரு நீரோடை பாலத்தின் அடியில் தேவ் ஆனந்த் பிணமாக கிடந்தார். உணவு வாங்க சென்ற போது தேவ் ஆனந்த் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்து போனதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பாலக்காடு போலீசார் தேவ் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×