என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியதில் உள்நோக்கம் இல்லை - அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்
Byமாலை மலர்3 Aug 2018 6:19 AM GMT
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியது இயற்கையாக நிகழ்ந்தவை. இதில் உள்நோக்கம் கற்பிப்பதற்கு ஒன்றுமில்லை என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார். #IdolSmugglingCases #CBI
ஆரணி:
ஆரணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதுபோன்ற பல்வேறு காரணங்களால், தமிழக அரசு தாமாக முன் வந்து, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ.க்கு மாற்றியதில் அரசியல் நோக்கம் இல்லை. ஒளிவு மறைவு இல்லாத தெளிவான விசாரணை தேவைப்படுகிறது.
சிலை கடத்தல் வழக்கில் வேகமாக செயல்படுவதுடன் நிறைய சிலைகளை மீட்பதற்காகவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசும் தனது நிலையை கோர்ட்டில் தெரிவித்துள்ளது. எந்த ஒரு மாநில அரசும் தாமாக வந்து சி.பி.ஐ. வசம் வழக்குகளை ஒப்படைத்ததில்லை.
மாறாக தமிழக அரசு சி.பி.ஐ.யிடம் சிலை கடத்தல் வழக்குகளை ஒப்படைத்திருப்பது, இயற்கையாக நிகழ்ந்தவை. இதில் உள்நோக்கம் கற்பிப்பதற்கு ஒன்றுமில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தரத்தில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #IdolSmugglingCases #CBI
ஆரணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் குழுவினர், தமிழக அரசுக்கு கடந்த ஓராண்டாக எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால், தமிழக அரசு தாமாக முன் வந்து, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ.க்கு மாற்றியதில் அரசியல் நோக்கம் இல்லை. ஒளிவு மறைவு இல்லாத தெளிவான விசாரணை தேவைப்படுகிறது.
சிலை கடத்தல் வழக்கில் வேகமாக செயல்படுவதுடன் நிறைய சிலைகளை மீட்பதற்காகவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசும் தனது நிலையை கோர்ட்டில் தெரிவித்துள்ளது. எந்த ஒரு மாநில அரசும் தாமாக வந்து சி.பி.ஐ. வசம் வழக்குகளை ஒப்படைத்ததில்லை.
மாறாக தமிழக அரசு சி.பி.ஐ.யிடம் சிலை கடத்தல் வழக்குகளை ஒப்படைத்திருப்பது, இயற்கையாக நிகழ்ந்தவை. இதில் உள்நோக்கம் கற்பிப்பதற்கு ஒன்றுமில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தரத்தில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #IdolSmugglingCases #CBI
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X