search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை காலங்களில் மின் விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? - கோவை மின்வாரியம் அறிவுரை
    X

    மழை காலங்களில் மின் விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? - கோவை மின்வாரியம் அறிவுரை

    மழை காலங்களில் மின் விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்று கோவை மின்வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.
    கோவை:

    கோவை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழை காலங்களில் மின்விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டி, இழுவை கம்பிகள் அருகே செல்லக்கூடாது. வீட்டில் மின்அதிர்ச்சி ஏற்பட்டால் ரப்பர் செருப்பை அணிந்து சுவிட்சை அணைத்த பின்னர் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

    தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கவோ, நடமாடவோ கூடாது. இடி- மின்னலின்போது மின் கம்பிகள், கம்பம், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவைகள் இல்லாத தாழ்வான பகுதியில் தஞ்சமடைய வேண்டும். இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதனப் பொருட்களை பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    மின் கம்பி அறுந்து கிடந்தால் அதனை மிதிக்காமல் உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களில் பந்தல் அமைக்க விளம்பர பலகைகளை பொருத்த கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பி அருகிலோ அல்லது மின்மாற்றி அருகிலோ நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கவோ கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகே இருக்க வேண்டாம்.

    ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மறறும் விளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது. மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால் நடைகளை கட்ட வேண்டாம். மின்சாரத்தினால் ஏற்படும் தீயிணை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சி செய்ய கூடாது. மழை காலங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் விழிப்போடும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு மின் விபத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×