search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அருகே போலி டாக்டர் கைது
    X

    கும்மிடிப்பூண்டி அருகே போலி டாக்டர் கைது

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உரிய மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உரிய மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து கவரப்பேட்டையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார நலப்பணிகளுக்கான இணை இயக்குனர் தயாளன் தலைமையில் மருத்துவ அதிகாரிகள், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ராஜா தெருவில் ஆர்.கே.கிளினிக் என்ற பெயரில் இயங்கி வந்த ஆஸ்பத்திரியை கல்பாக்கம், பல்லவன் நகரைச் சேர்ந்த சேகர் என்கிற சேகர் ராவ் நடத்தி வந்ததும், லேப் டெக்கினீசியன் மட்டுமே படித்த அவர் டாக்டர் என்று நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.

    அவர் கடந்த 2½ ஆண்டுகளாக ஆஸ்பத்திரி நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து போலி டாக்டர் சேகர் பற்றி மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குனர் தயாளன், கவரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் சேகரை கைது செய்தார்.

    மேலும் அவரிடம் இருந்து ஆங்கில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் குறிப்பாக கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இத்தகைய ஆய்வு நடவடிக்கை தொடரும்’ என்றார்.

    இந்த நிலையில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் நேற்றும், இன்றும் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×