search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலித்த பெண்ணிடம் உல்லாசம்: திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது
    X

    காதலித்த பெண்ணிடம் உல்லாசம்: திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது

    காதலித்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தவர் திருமணத்திற்கு மறுத்ததால் கைது செய்யப்பட்டார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜோதிலட்சுமி (வயது 23). இவர், ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனக்கும், செட்டியார் தெருவைச் சேர்ந்த பாண்டியராஜ் (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. தனியார் செல்போன் நிறுவனத்தின் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வரும் அவரை 3 ஆண்டுகளாக காதலித்தேன்.

    திருமணம் செய்வதாக பாண்டியராஜ் கூறியதை நம்பி பல இடங்களுக்குச் சென்றேன். அப்போது ஆசை வார்த்தை கூறி அவர் என்னிடம் உல்லாசம் அனுபவித்தார்.

    ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். பலமுறை கேட்டும் அவர், திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனவே பாண்டியராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து பாண்டியராஜ் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×