என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டாஸ்மாக் கடைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய குடிமகன்கள்
சூலூர்:
சூலூர் அருகே உள்ள பள்ளபாளையப் பகுதியிருந்து பட்டணம்புதூர் செல்லும் வழியில் குளக்கரை அருகில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இது ஊருக்கு வெளியே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளபாளையம் ,பட்டணம் புதூர் சாலையில் அமைந்துள்ளது. இதனால் தூரம் அதிகம் என்பதால் மது அருந்த செல்லுபவர்கள் இருசக்கர வாகனத் தில் மூன்று பேர் செல்வது சாதாரணமாக உள்ளது. அதுதவிர இந்த மதுக் கடையில் பார் வசதி இல்லாததால் மது அருந்துபவர்கள் மது பானங்களை பொது மக்கள் நடமாடும் பகுதியில் வைத்து அருந்தி வருகின்றனர்.
மேலும் குடித்துவிட்டு மதுபாட்டில்கள அருகிலிருக்கும் விவசாய நிலங்களிலும் பொதுமக்கள் நடமாடும் ரோட்டிலிலும் வீசிவிட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது .
இந்நிலையில் நேற்று மாலை சூலூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது பொதுப் பாதையில் மது அருந்தியவர்களையும், குடித்துவிட்டு வாகனத்தில் மூன்றுபேர் அமர்ந்து வந்தவர்களையும் பிடித்தனர்.
அதனை அறிந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர்கள் திடீரென கடையை விட்டு வெளியேவராமல் கடை வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் ஜெயக்குமார் அப்பகுதியில் இருந்த போலீசாருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.அதைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
குடிக்க வந்தவர்களே டாஸ்மாக் கடைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்