என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • கூட்டத்தில் முனிஷ் கன்னா புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
    • பிரீத்தி ஜிந்தாவுடன், மற்றொரு இயக்குநர் கரண் பாலும் கலந்து கொண்டார்.

    பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸின் இணை உரிமையாளர் ஆவார். இந்த அணியின் உரிமையை வைத்திருக்கும் கேபிஹெச் டிரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இணை இயக்குநர் பதவியை பிரீத்தி ஜிந்தா வகிக்கிறார்.

    இந்நிலையில் நிறுவனத்தின் இணை இயக்குநர்களான மோஹித் பர்மன் மற்றும் நெஸ் வாடியா ஆகியோருக்கு எதிராக சண்டிகர் நீதிமன்றத்தில் பிரீத்தி ஜிந்தா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    நிறுவனம் சார்பில் ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முனிஷ் கன்னா புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், இந்தக் கூட்டத்தை நடத்துவதில் 'நிறுவனங்கள் சட்டம், 2013' மற்றும் பிற விதிகள் பின்பற்றப்படவில்லை என்று பிரீத்தி ஜிந்தா தனது மனுவில் குற்றம் சாட்டினார்.

    இந்த கூட்டம் குறித்து ஏப்ரல் 10 ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் தனக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், தான் எழுப்பிய ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டதாக பிரீத்தி ஜிந்தா கூறினார்.

    சர்ச்சைக்குரிய இந்த கூட்டத்தில் பிரீத்தி ஜிந்தாவுடன், மற்றொரு இயக்குநர் கரண் பாலும் கலந்து கொண்டார். முனிஷ் கன்னாவின் நியமனத்தை இருவரும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

    இருப்பினும், மோஹித் பர்மன் மற்றும் நெஸ் வாடியாவின் ஆதரவுடன் கூட்டம் தொடர்ந்ததாகவும், கன்னாவின் நியமனம் இறுதி செய்யப்பட்டதாகவும் பிரீத்தி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    இந்த சூழலில், ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற கூட்டத்தையும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் ரத்து செய்யுமாறு பிரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தை நாடியுள்ளார். முனிஷ் கன்னா இயக்குநராக செயல்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் ஐபிஎல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

    • இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதி இருக்கின்றன.
    • 13-ல் ஐதராபாத்தும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

    இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் மழை அச்சுறுத்தல் காரணமாக லக்னோவுக்கு மாற்றப்பட்டது.

    பிளே-ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்), ஒரு முடிவில்லை என 17 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. அந்த அணியின் கடைசி ஆட்டம் (கொல்கத்தாவுக்கு எதிராக) மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதற்கு முந்தைய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்தது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (7 அரைசதத்துடன் 505 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். கேப்டன் ரஜத் படிதார், ஜேக்கப் பெத்தேல், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டுவும் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் குருணல் பண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா பலம் சேர்க்கின்றனர். தோள்பட்டை காயத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் (18 விக்கெட்) விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.

    இதற்கிடையே, லீக் சுற்றுடன் ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து) தாயகம் திரும்புவதால் அவருக்கு பதிலாக தற்காலிக மாற்று வீரராக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டை பெங்களூரு அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

    அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளியுடன் 8-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக 206 ரன் இலக்கை 10 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் என்று அதிரடி பட்டாளத்துக்கு குறைவில்லை. பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கம்மின்ஸ், இஷான் மலிங்கா நம்பிக்கை அளிக்கின்றனர்.

    இனிமேல் இழக்க எதுவுமில்லை என்பதால் ஐதராபாத் வீரர்கள் அச்சமின்றி அதிரடி காட்டி பெங்களூரு அணியின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பார்கள். அதே சமயம் புள்ளிபட்டியலில் டாப்-2 இடத்தில் நீடிக்க பெங்களூருவுக்கு இந்த ஆட்டத்தின் வெற்றி முக்கியம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடுவார்கள். மொத்தத்தில் இரு அணியிலும் 'சரவெடி' பேட்டர்கள் இருப்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதி இருக்கின்றன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    பெங்களூரு: பில் சால்ட் அல்லது ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், இங்கிடி, சுயாஷ் ஷர்மா.

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, ஜேய்தேவ் உனட்கட்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது பேட்ஸ்மேன் ஆவார்.
    • ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ரன்களை கடந்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை நிறைவு செய்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு டெஸ்டின் முதல் நாளில் 28-வது ரன்னை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார்.

    ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ரன்களை கடந்துள்ளார். 36 சதங்கள் மற்றும் 65 அரை சதங்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை வேகமாக எட்டிய சாதனை படைத்துள்ளார் ஜோ ரூட். இவர் 153 போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 159 போட்டிகளிலும், இந்தியாவின் ராகுல் டிராவிட் 160 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 162 போட்டிகளிலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 163 போட்டிகளிலும் எடுத்துள்ளனர்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 200 போட்டிகளில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 168 போட்டிகளில் 13,378 ரன்னும், ஜாக் காலிஸ் 166 போட்டிகளில் 13,289 ரன்னும், ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் 13,288 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 235 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரின் 64-வது லீக் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

    முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 37 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் சதமடித்து அசத்தினார்.

    2வது விக்கெட்டுக்கு இணைந்த மிட்செல் மார்ஷ்- நிகோலஸ் பூரன் ஜோடி 221 ரன்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 117 ரன்னில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

    இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 21 ரன்னிலும், சுப்மன் கில் 35 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த ரதர்போர்டு-ஷாருக் கான் ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 86 ரன்கள் சேர்த்த நிலையில் ரதர்போர்டு 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷாருக் கான் 22 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 57 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    லக்னோ அணி சார்பில் ரூர்கி 3 விக்கெட்டும், ஆவேஷ் கான், ஆயுஷ் பதோனி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

    • முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.
    • ஒல்லி போப், பென் டக்கெட், ஜாக் கிராலி ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இறங்கினர். ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 140 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஒல்லி போப் ஜாக் கிராலி உடன் இணைந்தார்.

    2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலி 124 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தினார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 34 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன்களைக் குவித்தது. ஒல்லி போப் 169 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • மிட்செல் மார்ஷ் 64 பந்தில் 117 ரன்கள் விளாசினார்.
    • நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் தொடரின் 64ஆவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் லக்னோ பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்று 53 ரன்கள் சேர்த்தது.

    அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 91 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார். அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். மிட்செல் மார்ஷ் 33 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 10.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    மிட்செல் மார்ஷ் உடன் பூரனும் சேர்ந்த அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடி 56 பந்தில் சதம் விளாசினார். மறுமுனையில் பூரன் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

    17.4 ஓவரில் லக்னோ 200 ரன்னைக் கடந்தது. 18ஆவது ஓவரில் லக்னோ 18 ரன்கள் அடித்தது. 19ஆவது ஓவரை ஆர்ஷத் கான் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் மார்ஷ் ஆட்டமிழந்தார். மார்ஷ் 64 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சருடன் 117 ரன்கள் விளாசினார்.

    அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். 19ஆவது ஓவரில் லக்னோ 9 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் அடிக்க லக்னோ 235 ரன்கள் குவித்துள்ளது. நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 6 பந்தில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • குஜராத் டைட்டன்ஸ் முதல் இடத்தில் நீடிக்க வெற்றி பெற முனைப்பு காட்டும்.
    • லக்னோ அணி வெற்றி பெற்றால், அந்த அணிக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    ஐபிஎல் தொடரின் 64ஆவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    • எதிரணியை ஆல் அவுட் செய்த அணிகள் பட்டியலில் ஆர்சிபி 2-வது இடத்தில் (26 முறை) உள்ளது.
    • 24 முறை எதிரணியை ஆல் அவுட் செய்த சிஎஸ்கே 4-வது இடத்தில் உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    இந்த போட்டியில் எதிரணியை ஆல் அவுட் செய்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் யாரும் தொட முடியாத சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது.

    அதன்படி எதிரணியை 40 முறை ஆல் அவுட் செய்து மும்பை இந்தியன்ஸ் முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஆர்சிபி அணி (26 முறை) உள்ளது. 3 முதல் 5 இடங்கள் முறையே கொல்கத்தா (25), சென்னை (24), பஞ்சாப் (19) ஆகிய அணிகள் உள்ளனர்.

    அடுத்த 5 இடங்கள் முறையே ஐதராபாத் (19 முறை), டெல்லி (18), ராஜஸ்தான் (17), குஜராத் (5), லக்னோ (4) ஆகிய அணிகள் உள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

    • இங்கிலாந்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி

    ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி கடைசியாக 2003-ல் விளையாடியபோது ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிமுக வீரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது.
    • 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்ற நிலையிலும், பிளேஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியவில்லை.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. முதல் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றது. அதன்பின் 13 போட்டிகளில் ஒரு போட்டி மழையால் தடைபட்டது. மற்ற போட்டிகளில் தோல்வியடைந்தது. நேற்று வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கு நிலையான தொடக்க ஜோடி அமையாதது காரணம் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹேமங் பதானி கூறுகையில் "தொடக்க ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும்போதுதான், நிலையான தொடக்க ஜோடி என தீர்மானிப்பது சாத்தியமானதாகும். அப்படி தொடக்கம் கிடைக்கவில்லை என்றால், அந்த இடைவெளியை நிரப்ப, அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்றங்களைச் செய்ய நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.

    மற்ற அணிகளை பார்த்தீர்கள் என்றால், அவர்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. பவர்பிளேயில் சிறப்பான ரன்கள் அடித்தனர். எங்களுக்கு அதுபோன்ற தொடக்கம் கிடைக்காததால், நாங்கள் இதுபோன்ற மாற்றங்களை செய்தோம்.

    சீசன் தொடக்கத்தில் மெக்கர்க்கை தொடக்க வீரராக களம் இறக்கினோம். அவர் சரியாக விளையாடவில்லை. அதன்பின் பொரேல், டு பிளிஸ்சிஸ், கருண் நாயர் என கொண்டு வந்தோம். எங்களுக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும் யாரும் எங்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.

    எங்களுடைய ஓபனிங் ஜோடி கவலை அளிக்கும் விதமாக இருந்தது. தொடரில் நாங்கள் முன்னேறி பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாததற்கு இது ஒரு முக்கிய காரணம்" என்றார்.

    • இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் 24ஆம் தேதிக்குப் பிறகு சொந்த நாடு திரும்புகிறார்.
    • நியூசிலாந்து வீரரை 2 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி ஒப்பந்தம் செய்ய இருக்கிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 12 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.

    இன்னும் இரண்டு போட்டிகளில் மீதமுள்ளது. நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத், 27ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேற முயற்சிக்கும்.

    லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர், வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட சென்றுவிடுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றன. ஆர்சிபி அணியில் இங்கிலாந்தை சேர்ந்த ஜேக்கப் பெத்தேல் இடம் பிடித்துள்ளார். பில் சால்ட் விளையாடாதபோது, பெத்தேல் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

    இவர் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறார். இதனால் ஆர்சிபி இவருக்குப் பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த டிம் செய்பெர்ட்டை ஒப்பந்தம் செய்ய உள்ளது. இவர் நியூசிலாந்து அணிக்காக 66 டி20 போட்டிகளில் விளையாடி 1540 ரன்கள் அடித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக இவர் மூன்று ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக 2022 தொடரில் விளையாடினார். ஆர்சிபி 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ய இருக்கிறது.

    பெத்தேல் நாளைக்கு ஐதராபாத் அணிகெத்திரான போட்டியில் விளையாடுவார். ஆர்சிபி-ஐ தவிர்த்து குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    • ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
    • வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் 14 வயது வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இந்திய U19 அணி வீரர்கள்:

    ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & WK), ஹர்வன்ஷ் சிங் (WK), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, ராவ் ராகவேந்திரா, முகமது ஏனான், ஆதித்யா சிங், அன்மோலி ரனா

    ×