என் மலர்
நீங்கள் தேடியது "GTvLSG"
- டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 235 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரின் 64-வது லீக் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.
முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 37 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் சதமடித்து அசத்தினார்.
2வது விக்கெட்டுக்கு இணைந்த மிட்செல் மார்ஷ்- நிகோலஸ் பூரன் ஜோடி 221 ரன்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 117 ரன்னில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.
இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 21 ரன்னிலும், சுப்மன் கில் 35 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த ரதர்போர்டு-ஷாருக் கான் ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 86 ரன்கள் சேர்த்த நிலையில் ரதர்போர்டு 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷாருக் கான் 22 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 57 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
லக்னோ அணி சார்பில் ரூர்கி 3 விக்கெட்டும், ஆவேஷ் கான், ஆயுஷ் பதோனி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 227 ரன்களை குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரரனா விரித்திமான் சகா சூறாவளியாய் சுழற்றி அடித்தார்.
சிக்சர். பவுண்டரிகளாக விளாசினார். மற்றொரு வீரர் ஷுப்மன் கில்லும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 43 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 81 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கி 14 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ரன்களை எடுத்தது. ஷுப்மன் கில் 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய குஜராத் 227 ரன்களை குவித்தது.
- தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ரன்களை குவித்தது. ஷுப்மன் கில் 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சகா 43 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 81 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி கைல் மேயர்ஸ், டி காக் அதிரடியாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 88 ஆக இருந்தபோது கைல் மேயர்ஸ் 48 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
டி காக் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 70 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 21 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.
குஜராத் சார்பில் மோகித் சர்மா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.






