என் மலர்
நீங்கள் தேடியது "all out"
- எதிரணியை ஆல் அவுட் செய்த அணிகள் பட்டியலில் ஆர்சிபி 2-வது இடத்தில் (26 முறை) உள்ளது.
- 24 முறை எதிரணியை ஆல் அவுட் செய்த சிஎஸ்கே 4-வது இடத்தில் உள்ளது.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
இந்த போட்டியில் எதிரணியை ஆல் அவுட் செய்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் யாரும் தொட முடியாத சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது.
அதன்படி எதிரணியை 40 முறை ஆல் அவுட் செய்து மும்பை இந்தியன்ஸ் முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஆர்சிபி அணி (26 முறை) உள்ளது. 3 முதல் 5 இடங்கள் முறையே கொல்கத்தா (25), சென்னை (24), பஞ்சாப் (19) ஆகிய அணிகள் உள்ளனர்.
அடுத்த 5 இடங்கள் முறையே ஐதராபாத் (19 முறை), டெல்லி (18), ராஜஸ்தான் (17), குஜராத் (5), லக்னோ (4) ஆகிய அணிகள் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் நடந்தது.
- இதில் இந்தியா வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
போபால்:
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று குவாலியரில் நடைபெற்றது. முதலில் ஆடிய வங்கதேசம் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 11.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது அர்ஷ்தீப் சிங்குக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிரணியை அதிக முறை ஆல் அவுட் ஆக்கிய அணி என்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 கிரிக்கெட்டில் 42 முறை எதிரணியை ஆல் அவுட்டாக்கி உள்ளது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து 3வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காயத்தில் சிக்கிய ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், 2-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும், ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 108.3 ஓவர்கள் தாக்கு பிடித்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விகாரி ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. துவக்க வீரர் முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். #AUSvIND






