என் மலர்
நீங்கள் தேடியது "Zak Crawley"
- நேற்றைய நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிராலி தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்தார்.
- பும்ரா பந்துவீச்சில் தனது கையில் அடிபட்டதாக கூறி கிராலி பிசியோவை கூப்பிட்டார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார்.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.
இதனிடையே நேற்றைய நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிராலி தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பும்ரா பந்துவீச்சில் தனது கையில் அடிபட்டதாக கூறி கிராலி பிசியோவை கூப்பிட்டார். போட்டியின் கடைசி நிமிடங்களில் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்து 3 ஆம் நாளில் பேட்டிங் செய்யாமல் தவிர்க்க கிராலி வேண்டுமென்றே பிசியோவை கூப்பிடுவதாக சுப்மன் கில் கோபமடைந்தார். ரிட்டையர்ட் அவுட் முறையில் கிராலி வெளியேறுவதாக கில் சைகை செய்து கிண்டல் செய்தார். இதனால் கிராலி - கில் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட பென் டக்கெட் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.
- ஒல்லி போப், பென் டக்கெட், ஜாக் கிராலி ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
லண்டன்:
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இறங்கினர். ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 140 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஒல்லி போப் ஜாக் கிராலி உடன் இணைந்தார்.
2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலி 124 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தினார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 34 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன்களைக் குவித்தது. ஒல்லி போப் 169 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் டக் அவுட்டில் வெளியேறினார்.
- மற்றொரு தொடக்க வீரர் சாக் கிராலி அரை சதம் விளாசினார்.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. ஷபீக் மற்றும் கேப்டன் மசூத் சதம் விளாசி ஆட்டமிழந்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மற்ற வீரர்கள் விக்கெட்டை இழந்தாலும் பொறுப்புடன் ஆடிய ஆகா சல்மான் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக சாக் கிராலி- ஒல்லி போப் களமிறங்கினர். கேப்டன் போப் டக் அவுட்டில் வெளியேறினார். இதனையடுத்து கிராலியுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய கிராலி அரை சதம் விளாசினார்.
2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. கிராலி 64 ரன்னுடனும் ரூட் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.






