என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    VIDEOஇந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், சமகாலத்தில் மிகவும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தான் என்று ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

    சமீபத்திய நேர்காணலில் கடந்த சில ஆண்டுகளில் உங்களை மிகவும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? என்று ஜாஸ் பட்லரிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த பட்லர், "அது ரோகித் ஷர்மாதான். சிறப்பாக விளையாடி இந்திய அணியை நேர்த்தியாக வழி நடத்தினார். நான் ரோகித்தின் மிகப்பெரிய ரசிகன்" என்று தெரிவித்தார். 

    • 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்பதாக விராட் கோலி தெரிவித்தார்.
    • "நீ சிங்கம் தான்" என்று விராட் கோலிக்கு சிம்பு புகழாரம் சூட்டினார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆர்.சி.பி. அணி டாப் 4-க்குள் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில், "சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்ற 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று விராட் கோலி தெரிவித்தார்.

    அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி,"தற்போது எனக்கு மிகவும் பிடித்த பாடல், இதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள், நீ சிங்கம் தான் பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை ஆர்.சி.பி. அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதனையடுத்து இந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சிம்பு, "நீ சிங்கம் தான்" என்று விராட் கோலிக்கு புகழாரம் சூட்டினார்.

    இந்நிலையில் முதல்முறையாக கோலியை சந்தித்தது குறித்து சிம்பு பேசியுள்ளார். 'தக் லைப்' படத்தின் புரமோசனின்போது பேசிய சிம்பு, "கோலி தான் அடுத்த சச்சின் என நான் முன்பே கணித்தேன். அதுபோலவே அவர் பெரிய ஆளாக வந்தார். ஒருநாள் நேரில் சந்தித்தபோது அவரிடம் Hi சொன்னேன். நீங்கள் யார் என என்னிடம் அவர் கேட்டார். சிம்பு என்றேன். தெரியாது என்றார். அப்போது 'ஒருநாள் என்னை யார்னு தெரியவரும். அப்போ பாத்துக்கிறேனு' நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் கோலிக்கு 'நீ சிங்கம் தான்' பாடல் பிடிக்கும் என்றார். அதில் தான் நடித்திருப்பது அவருக்கு தெரியுமா? என்று சொல்ல முடியாது. ஆனால் அதுவே எனக்கு வெற்றி தான்'' என்று தெரிவித்தார்.

    • ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பெங்களூரு அணி சரிந்துள்ளது.

    ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    சின்னசாமி மைதானம் அல்லாத மற்ற மைதானங்களில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பெங்களூரு அணியை முதல்முறையாக ஐதராபாத் அணி தோற்கடித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பெங்களூரு அணி சரிந்துள்ளது

    இப்போட்டியில் விராட் கோலி 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்தார்.

    • டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
    • புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வர பஞ்சாப் அணி முனைப்பு காட்டுகிறது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 190 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி கண்டுள்ளது. பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் (458 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (435), பிரியான்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, ஷசாங் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிராரும் கலக்குகிறார்கள்.

    டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. தனது முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வென்று வீறுநடை போட்ட டெல்லி அடுத்த 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று சறுக்கியதுடன், பிளே-ஆப் வாய்ப்பையும் பறிகொடுத்தது.

    டெல்லி அணியில் லோகேஷ் ராகுல் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 504 ரன்) தவிர்த்து மற்றவர்களின் பேட்டிங் சீராக இல்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒருசேர சிறப்பாக ஆடாதது பலவீனமாக உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக முந்தைய ஆட்டத்தில் ஆடாத கேப்டன் அக்ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது உறுதியாகவில்லை. அவர் உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் பாப் டு பிளிஸ்சிஸ் அணியை வழிநடத்துவார்.

    இவ்விரு அணிகள் கடந்த 8-ந்தேதி தர்மசாலாவில் சந்தித்த போது, இந்தியா -பாகிஸ்தான் சண்டை காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானதால் ஸ்டேடியத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டம் தான் தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது.

    தோல்வியால் துவண்டு போயுள்ள டெல்லி அணி, பஞ்சாப்பை பதம் பார்த்து இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்யும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது. அதே சமயம் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வர பஞ்சாப் அணி முனைப்பு காட்டுகிறது. இதில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், நேஹல் வதேரா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஷசாங் சிங், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், மார்கோ யான்சென், கைல் ஜாமிசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரித் பிரார்.

    டெல்லி: லோகேஷ் ராகுல், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, விப்ராஜ் நிகம், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல் (கேப்டன்) அல்லது மாதவ் திவாரி, துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான், முகேஷ் குமார்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.

    இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அபிஷேக் சர்மா 34 ரன்னும், அனிகேட் வர்மா 26 ரன்னும், கிளாசன் 24 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார்.

    விராட் கோலி 43 ரன்னும், ஜிதேஷ் சர்மா 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    ஐதராபாத் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் சதமடித்தனர். பென் டக்கெட் 140 ரன்னிலும், ஜாக் கிராலி 124 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய ஒல்லி போப் அபாரமாக ஆடி சதமடித்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஒல்லி போப் 171 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 565 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    ஜிம்பாப்வே அணியின் முசாராபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 139 ரன்னில் அவுட்டானார். கேப்டன் கிரெய்க் எர்வின் 42 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

    மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சை விட 300 ரன்கள் பின்தங்கியதால் பாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து சார்பில் ஷோயப் பஷிர் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், கட் அட்கின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் பவர்பிளேயில் 71 ரன்கள் குவித்தது.
    • இஷான் கிஷன் 48 பந்தில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பெங்களூருவில் மழை அச்சுறுத்தல் இருப்பதால் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

    இன்றைய போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். இதனால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். டாஸ் வென்ற ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தபோதிலும் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. டிராவிஸ் ஹெட் 10 பந்தில் 17 ரன்களும், அபிஷேக் சர்மா 17 பந்தில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பவர்பிளேயில் 71 ரன்கள் குவித்தது.

    அடுத்து வந்த இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழந்தன. கிளாசன், அனிகெட் வர்மா தலா 24 ரன்களும், நிதிஷ் ரெட்டி 4 ரன்னிகளிலும், அபிநவ் மனோகர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8.4 ஓவரில் 100 ரன்களையும், 12.3 ஓவரில் 150 ரன்னையும் தொட்டது. இஷான் கிஷன் 28 பந்தில் அரைசதம் அடித்தார்.

    17 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அத்துடன் ஐதராபாத் 203 ரன்கள் குவித்தது.

    19ஆவது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஐதராபாத் 216 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.

    இஷான் கிஷன் 48 பந்தில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • 2015-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 16 பந்தில் டி வில்லியர்ஸ் அரைசதம் அடித்திருந்தார்.
    • ஜெயசூர்யா, குசால் மெண்டிஸ், கப்தில், லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.

    அயர்லாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி டுப்ளினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் 8ஆவது வீரராக களம் இறங்கிய மேத்யூ போர்டு 19 பந்தில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார். அவர் 16 பந்தில் 1 பவுண்டரி, 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார். பவுண்டரி மற்றும் சிக்சர் மூலமாகவே அரைசதம் விளாசினார்.

    இதன்மூலம் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார். டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2015-ல் 16 பந்தில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். 10 வருடங்கள் கழித்து அவரது சாதனையை மேத்யூ போர்டு சமன் செய்துள்ளார்.

    ஜெயசூர்யா (1996) பாகிஸ்தானுக்கு எதிராகவும், குசால் பெரேரா (2015) பாகிஸ்தானுக்கு எதிராகவும், மார்ட்டின் (2015) கப்தில் இலங்கைக்கு எதிராகவும், லிவிங்ஸ்டன் (2022) நெதர்லாந்துக்கு எதிராகவும் 17 பந்தில் அரைசதம் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளனர்.

    • ரஜத் படிதார் இம்பேக்ட் பிளேயராக களம் வருவதால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.
    • மயங்க் அகர்வால் படிதாருக்குப் பதிலாக களம் இறங்குகிறார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூருவில் மழை அச்சுறுத்தல் இருப்பதால் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

    இன்றைய போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். இதனால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-

    டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, அபிநவ் மனோகர், கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா, ஜெய்தேவ் உனத்கட்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:-

    பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், லுங்கி நிகிடி, சுயாஷ் சர்மா.

    • ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
    • ஆர்சிபி அணி இன்று ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.

    இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு சில தினங்களில் குழந்தை பிறக்கவுள்ளதால் பிளே ஆப் சுற்றை தவறவிடுகிறார்.

    இந்த முறையாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு உத்வேகத்தில் இருக்கும் நிலையில் இவரது விலகல் ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக இருக்கும். இவர் நடப்பு தொடரில் 9 போட்டிகள் விளையாடி 239 ரன்கள் குவித்துள்ளார்.

    சமீபத்தில், இளம் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெதெலுக்குப் பதிலாக நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட்டை ஆர்சிபி ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்
    • ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு. ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

    இலங்கை அணி நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

    இவர் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (சராசரி: 45), 16 சதங்களுடன் 8,167 ரன்கள் விளாசியுள்ளார். 226 ஒருநாள் போட்டிகள், 5,916 ரன்கள் (சராசரி: 40), 3 சதங்கள் விளாசினார். பந்து வீச்சில் 120 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் 90 டி20 போட்டிகளில் 1,416 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும்.

    இவர் இலங்கை அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். அதன்படி, 2014 டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    மேலும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2009, 2012 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் இலங்கை அணியின் வீரராக மேத்யூஸ் இருந்தார்.

    2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் லசித் மாலிங்காவுடன் இணைந்து 9-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 132 ரன்கள் என்ற உலக சாதனையை படைத்தார்.

    2014 ஆசியக் கோப்பையை இலங்கை அணி மேத்யூஸ் தலைமையில் கைப்பற்றியது.

    2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக "டைம்டு அவுட்" முறையில் ஆட்டமிழந்தவர் என்ற சாதனையயும் மேத்யூஸ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முகமது சமி இடம்பெற மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இங்கிலாந்து தொடர் நடைபெற உள்ள நிலையில் இருவரும் ஓய்வு பெற்றதால் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக யார் நியமிக்கப்படுவார். அணியில் இடம்பெறும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கேப்டன் பதவிக்கு சுப்மன் கில், பும்ரா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

    இதற்கிடையே இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இன்று நிருபர்களை சந்திக்க உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 16 முதல் 17 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதல் முறையாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    இதற்கிடையே வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, இங்கிலாந்து தொடரில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. காயத்தில் இருந்து அவர் மீண்டு வந்திருந்தாலும் நீண்ட நேரம் பந்து வீசும் அளவுக்கு அவர் முழுமையாக குணமடையவில்லை என்றும், எனவே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முகமது சமி இடம்பெற மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×