என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இதன்மூலம் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 25+ ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் பவுமாவின் (13 முறை) சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 583 ரன்கள் குவித்து ஆரஞ் தொப்பிக்கான பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். 

    • விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
    • இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரில் விளையாட கோலி விரும்பி இருந்தார். ஆனால் முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    இந்நிலையில், "விராட் கோலிக்கு எதிராக விளையாட முடியவில்லை என்று நினைப்பதை நான் அவமானமாக கருதுகிறேன்" என்று மெசேஜை கோலிக்கு அனுப்பியதாக இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோவில் பேசிய ஸ்டோக்ஸ், "இந்த முறை விராட் கோலிக்கு எதிராக விளையாட முடியவில்லை என்பது எனக்கு அவமானமாக இருக்கும் என்று நான் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். கோலிக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்தில் நாங்கள் ஒரே மாதிரியான மனநிலையை கொண்டிருப்பதால் நாங்கள் எப்போதும் போட்டியை ரசித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். 

    • 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
    • டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. நேற்று இரவு வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4-வது அணி யார் என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது. டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இதனிடையே, போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் பங்கேற்ற டாஸ் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் போடுவதற்கான நாணயத்தை வாங்கும் போது டெல்லி அணி கேப்டன் டு பிளெசிஸ் அதனை சரிபார்ப்பது போன்று பார்க்கிறார். அப்போது மற்றொருவர் அந்த நாணயத்தை காண்பித்ததும் டு பிளெசிஸ் தலை ஆட்டியதும் ஹர்திக் பாண்டியா டாஸ் போடுகிறார்.

    கடந்தாண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடப்பட்டபோது பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் ஏமாற்றப்பட்டார் என்று அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    அதனால் கடந்தாண்டு ஏமாந்தது போல இந்தாண்டு ஏமாற கூடாது என்று டாஸ் நாணயத்தை டு பிளெசிஸ் சரிபார்த்தார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 



    • புள்ளி பட்டியலில் டாப்-2 பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும்.
    • கேப்டன் ரிஷப் பண்டின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

    இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைத்தது. அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

    புள்ளி பட்டியலில் டாப்-2 பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி பெறும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இதனால் முதல் இரு இடங்களுக்குள் நீடிக்க குஜராத் அணி தீவிரமாக உள்ளது. பெங்களூரு, பஞ்சாப் (தலா 17 புள்ளி) அணிகள் முதல் இரு இடத்துக்கான ரேசில் நெருக்கமாக இருக்கின்றன.

    குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. பேட்டிங்கில் ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கும் சாய் சுதர்சன் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 617 ரன்), கேப்டன் சுப்மன் கில் (601), ஜோஸ் பட்லர் (500) அசத்தி வருகின்றனர். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (21 விக்கெட்), முகமது சிராஜ், சாய் கிஷோர் (தலா 15 விக்கெட்) கலக்குகிறார்கள்.

    இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்ததன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. அத்துடன் கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது.

    அந்த அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (455 ரன்), மிட்செல் மார்ஷ் (443), மார்க்ரம் (409), ஆயுஷ் பதோனி கைகொடுக்கிறார்கள். ஆனால் கேப்டன் ரிஷப் பண்டின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. இதுவரை ஒரு அரைசதம் உள்பட 135 ரன்களே எடுத்துள்ளார். பந்து வீச்சில் கவனத்தை ஈர்க்கும் வகையில் பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடமுடியாது. இது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும்.

    மொத்தத்தில் லக்னோவுக்கு எதிராக ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட குஜராத் அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன் உள்ளூரில் ஆதிக்கத்தை நிலைநாட்ட வரிந்துகட்டி நிற்கும். அதே நேரம் அவர்களின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட லக்னோ முழுவீச்சில் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், கசிசோ ரபடா, அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    லக்னோ: மிட்செல் மார்ஷ், மார்க்ரம், ரிஷப் பண்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், ஷபாஸ் அகமது அல்லது எம்.சித்தார்த், வில்லியம் ஓ ரூர்கே.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது
    • டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இப்போட்டியில் கே.எல்.ராகுல் 11 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 7 முறை ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் இதுவரை 504 ரன்கள் அடித்துள்ளார்.

    8 முறை ஐபிஎல் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்து இப்பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
    • டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இப்போட்டியில் ரிக்கல்டன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அசத்தியுள்ளார். 

    • முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 303 ரன்களைக் குவித்தது.
    • கேப்டன் பால் ஸ்டிர்லிங் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.

    டப்ளின்:

    அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி 112 ரன்கள் எடுத்தார். அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.1 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 124 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பால் ஸ்டிர்லிங் 34 ரன்களைக் கடந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த முதல் அயர்லாந்து வீரர் என்ற சாதனை படைத்தார்.

    பால் ஸ்டிர்லிங் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என 3 வடிவ போட்டிகளில் விளையாடி இதுவரை 10,017 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.
    • 3வது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றது.

    ஷார்ஜா:

    வங்கதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன.

    இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்களை எடுத்தது. ஜாக்கர் அலி 41 ரன்னும், தன்ஜித் ஹசன் 40 ரன்னும் எடுத்தனர்.

    யு.ஏ.இ. சார்பில் ஹைதர் அலி 3 விக்கெட்டும், மைதுல்லா கான், சாகிர் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அலிஷான் ஷராபு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் யு.ஏ.இ. அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது அலிஷான் ஷராபுவுக்கும், தொடர் நாயகன் விருது முகமது வசீமுக்கும் வழங்கப்பட்டது.

    • டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 43 பந்தில் 73 ரன்னும், நமன் திர் 8 பந்தில் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    திலக் வர்மா 27 ரன்னும், ரிக்கெல்டன் 25 ரன்னும், வில் ஜேக்ஸ் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி இரு ஓவரில் சூர்யகுமார், நனம் திர் ஜோடி 49 ரன்கள் சேர்த்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    • முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்களைக் குவித்தது.
    • தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி 112 ரன்கள் எடுத்தார்.

    டப்ளின்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி 112 ரன்கள் எடுத்தார்.

    கேப்டன் பால் ஸ்டிர்லிங் 54 ரன்னும், ஹாரி டெக்டோர் 56 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மேத்யூ போர்டே 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அயர்லாந்து அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் முன்னணி வீரர்கள் வெளியேறினர். 31 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது.

    அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார். மேத்யூ போர்டே 38 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 35 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 34.1 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 124 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    அயர்லாந்து சார்பில் பேரி மெக் கார்த்தி 4 விக்கெட்டும், ஜார்ஜ் டாக்ரெல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது பால்பிர்னிக்கு வழங்கப்பட்டது.

    • ரோகித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 63ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியில் அக்சர் படேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இடம் பெறவில்லை.

    மும்பை அணியின் ரியான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 5 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தா்.

    அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 21 ரன்னிலும், மறுமுனையில் விளையாடிய ரிக்கெல்டன் 25 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் 6.4 ஓவரில் 58 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா 27 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னில் வெளியேறினார்.

    ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்கும்போது மும்பை இந்தியன்ஸ் 16.3 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் நமன் திர் ஜோடி சேர்ந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்திருந்தது. 19ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் முகேஷ் குமார் 3 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 159 ரன்கள் சேர்த்தது.

    கடைசி ஓவரை சமீரா வீசினார். இந்த ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 43 பந்தில் 73 ரன்களும், நமன் திர் 8 பந்தில் 24 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • பிளேஆஃப் போட்டிகளில் பட்லர் விளையாடமாட்டார்.
    • மிடில் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இடையில் நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகள் 10 நாட்கள் கழித்து நடத்தப்பட்டு வருகிறது. இதனால் முந்தைய போட்டி அட்டவணையை விட நாட்கள் அதிகமாகியுள்ளன.

    இதன் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் ஜாஸ் பட்லர் இடம் பிடித்துள்ளார். இவர் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அணி கவலைப்படவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மேத்யூ வேட் கூறுகையில் "நாங்கள் நிச்சயமாக கவலைப்படவில்லை. ஏற்கனவே கில், சாய் சுதர்சன் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அணியில் உள்ள வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது, அபாரமான ஃபார்மில் இருக்கும் அவர்கள், அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

    முதல் மூன்று இடங்களில் களம் இறங்கும் வீரர்கள் மெஜாரிட்டியான ரன்களை அடிக்கும்போது சிறப்பானதாக இருக்கும். பட்லர் சென்ற பிறகு, 3ஆவது இடத்தில் களம் இறங்க மற்றொருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    அப்படி வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் களம் இறங்கி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்.

    பாசிட்டிவ் விசயம் என்னவென்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். ரூதர்போர்டு ஷெர்ஃபேன், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்" என்றார்.

    ×