என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேபிட்டல்ஸ்"

    • 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
    • டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. நேற்று இரவு வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4-வது அணி யார் என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது. டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இதனிடையே, போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் பங்கேற்ற டாஸ் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் போடுவதற்கான நாணயத்தை வாங்கும் போது டெல்லி அணி கேப்டன் டு பிளெசிஸ் அதனை சரிபார்ப்பது போன்று பார்க்கிறார். அப்போது மற்றொருவர் அந்த நாணயத்தை காண்பித்ததும் டு பிளெசிஸ் தலை ஆட்டியதும் ஹர்திக் பாண்டியா டாஸ் போடுகிறார்.

    கடந்தாண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடப்பட்டபோது பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் ஏமாற்றப்பட்டார் என்று அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    அதனால் கடந்தாண்டு ஏமாந்தது போல இந்தாண்டு ஏமாற கூடாது என்று டாஸ் நாணயத்தை டு பிளெசிஸ் சரிபார்த்தார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 



    • எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
    • இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன.

    எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

    இந்நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக தோற்றால் அடுத்த ஆட்டத்தில் (பஞ்சாப்புக்கு எதிராக) வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி அணி (பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியை சந்திக்க வேண்டும்.

    டெல்லி அணியை பொறுத்தமட்டில் எஞ்சிய இரு போட்டிகளிலும் வென்றாக வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும்.

    இந்நிலையில், மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள மும்பை - டெல்லி போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால், ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வருகிற 23-ந் தேதி ஆர்சிபி- சன்ரைசர்ஸ் அணிகள் மோத இருந்தனர். ஆனால்

    முன்னதாக, பெங்களூருவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற 23-ந் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த பெங்களூரு - ஐதாராபாத் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
    • மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

    இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

    இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக தோற்றால் அடுத்த ஆட்டத்தில் (பஞ்சாப்புக்கு எதிராக) வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி அணி (பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியை சந்திக்க வேண்டும்.

    டெல்லி அணியை பொறுத்தமட்டில் எஞ்சிய இரு லீக்கிலும் வென்றாக வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். அதன் பிறகு அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தினாலும் 15 புள்ளியை தான் தொட முடியும்.

    மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. தனது முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற அந்த அணி அதன் பிறகு எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்தது. முந்தைய ஆட்டத்தில் குஜராத்திடம் வீழ்ந்தது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (510 ரன்), ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, திலக் வர்மாவும், பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, கரண் ஷர்மாவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    டெல்லி அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி கண்டு கம்பீரமாக பயணித்தது. அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று தள்ளாடுகிறது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (493 ரன்) நல்ல நிலையில் உள்ளார். அபிஷேக் போரெல், அஷூதோஷ் ஷர்மா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பாப் டுபிளிஸ்சிஸ் அவ்வப்போது பங்களிப்பு அளிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், கேப்டன் அக்ஷர் பட்டேல் வலு சேர்க்கிறார்கள். முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) விலகியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    இந்த சீசனில் உள்ளூரில் கடைசி ஆட்டத்தில் ஆடும் மும்பை அணி வெற்றிகரமாக நிறைவு செய்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவதுடன், பிளே-ஆப் சுற்றையும் உறுதி செய்ய தீவிரம் காட்டும். டெல்லிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வென்று இருப்பதால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் வாழ்வா - சாவா? நிலையில் களம் காணும் டெல்லி அணி பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்கும். எனவே ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 20 ஆட்டங்களிலும், டெல்லி 16 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில் வான்கடேவில் மும்பை அணி 6 ஆட்டங்களில் ஆடி 4-ல் வாகை சூடியிருக்கிறது.

    இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மும்பையில் நேற்று மழை செய்தது. அங்கு அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.

    டெல்லி: லோகேஷ் ராகுல், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், டி.நடராஜன், குல்தீப் யாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான், துஷ்மந்தா சமீரா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 93 ரன்கள் அடித்தார்.
    • 143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார்.

    ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். .

    இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் 93 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த 2வது இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்து உள்ளார்.

    143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார். சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்துள்ளார்.

    • டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய டெல்லி அணி 199 ரன்களை குவித்தது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அபிஷேக் பொரெல் 30 ரன்னும், அக்சர் படேல் 25 ரன்னும், ஸ்டப்ஸ் 21 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.

    சாய் சுதர்சன் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. டெல்லி அணியின் 5வது தோல்வி இதுவாகும்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (2 முறை லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியுடன் (மும்பை, குஜராத், பெங்களூரு அணிகளிடம்) 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சரியான பார்ட்னர்ஷிப் அளிக்காததும், வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் (51 ரன்) ரன்னை வாரி வழங்கியதும் பாதகத்தை ஏற்படுத்தியது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (364) அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கருண் நாயர், அஷூதோஷ் ஷர்மா கணிசமான பங்களிப்பை அளித்தால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் நம்பிக்கை அளிக்கின்றனர்.

    கொல்கத்தா அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம்) என 7 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து பணிந்த கொல்கத்தா அணி, பஞ்சாப்புடன் இரண்டாவது முறையாக மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்தானது. இதில் 202 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்த நிலையில் மழை பலமாக கொட்டியதால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது.

    கொல்கத்தா அணிக்கு பேட்டிங் பெரும் தலைவலியாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக சுனின் நரினுடன் களம் கண்ட குயின்டான் டி காக் சோபிக்காததால் ரமனுல்லா குர்பாஸ் அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டார். அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அந்த அணியில் கேப்டன் ரஹானே (271 ரன்) தவிர யாரும் 200 ரன்னை கூட தாண்டவில்லை. வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கிடம் இருந்து இயல்பான அதிரடி வெளிப்படவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் பலம் சேர்க்கிறார்கள்.

    உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் 7-வது வெற்றியை குறிவைத்து டெல்லி அணி களம் காண்கிறது. சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன், அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் எல்லா ஆட்டங்களும் முக்கியம் என்பதால் கொல்கத்தா அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    டெல்லி: பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், கருண் நாயர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அஷூதோஷ் ஷர்மா அல்லது மொகித் ஷர்மா.

    கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரோமன் பவெல், ஆந்த்ரே ரஸ்செல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சகாரியா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லக்னோ அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 பள்ளிகளை பெற்றுள்ளது.
    • டெல்லி அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    லக்னோ அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 பள்ளிகளை பெற்றுள்ளது. அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) வலுவான நிலையில் காணப்படுகிறது.

    டெல்லிக்கு எதிராக ஏற்கனவே மோதிய லீக்கில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க லக்னோ தீவிரம் காட்டுவதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    • காயம் காரணமாக கடந்த 4 ஆட்டங்களை தவறவிட்ட பாப் டு பிளிஸ்சிஸ் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.
    • டெல்லிக்கு எதிராக ஏற்கனவே மோதிய லீக்கில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று இரவு நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

    லக்னோ அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 பள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (368 ரன்), மிட்செல் மார்ஷ் (299), மார்க்ரம் (274), ஆயுஷ் பதோனி சூப்பர் பார்மில் இருக்கின்றனர். கேப்டன் ரிஷப் பண்டும் (106ரன்) மிரட்டினால் பேட்டிங் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் பலம் சேர்க்கின்றனர்.

    அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) வலுவான நிலையில் காணப்படுகிறது. பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (266 ரன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல், அஷூதோஷ் ஷர்மா, கருண் நாயர் நம்பிக்கை அளிக்கின்றனர். காயம் காரணமாக கடந்த 4 ஆட்டங்களை தவறவிட்ட பாப் டு பிளிஸ்சிஸ் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. லக்னோ அணியில் இருந்து பிரிந்த பிறகு அந்த அணிக்கு எதிராக லோகேஷ் ராகுல் களம் காணும் முதல் ஆட்டம் இதுவாகும். இதனால் அவரது பேட்டிங் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

    டெல்லிக்கு எதிராக ஏற்கனவே மோதிய லீக்கில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க லக்னோ தீவிரம் காட்டுவதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஐபிஎல் போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • ஐதராபாத் அணியின் அதிரடியை தடுப்பதை பொறுத்தே டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, முதலாவதாக ஐதராபாத் அணி களமறிங்க உள்ளது.

    ஐதராபாத் அணியின் அதிரடியை தடுப்பதை பொறுத்தே டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 11-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும்.
    • டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பத்து அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் போட்டியில் விளையாட வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    மற்றொரு போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியி எதிர்கொண்டு விளையாடுகிறது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது.

    கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து நல்ல நிலைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    ஐ.பி.எல். தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார்.
    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

    இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.

    இம்மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

    • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்கவைக்கவில்லை.
    • ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 வீரர்களை தக்கவைத்துள்ளது. அக்சர் படேல் ரூ.16.5 கோடி, குல்தீப் யாதவ் ரூ.13.5 கோடி, தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.10 கோடி, அபிஷேக் போரெல் ரூ.4 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்கவைக்கவில்லை. இதனால் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்த முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர், "டெல்லி அணியின் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் பெயர் இல்லாததற்கு பணம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ மீண்டும் வாங்கும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்த ரிஷப் பண்ட், "டெல்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.

    ×