என் மலர்
விளையாட்டு
- 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
- முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-3-7-6 (7-3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் அரைஇறுதியில் 2-ம் நிலை வீரரான ஜானனிக் சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார்.
முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார். இதனால் 7-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) அரையிறுதி வாய்ப்பை பெற்றார்.
அவர் அரை இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.
- பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது.
- இதற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களில் அசாம் கானை பார்த்து பாபர் அசாம் காண்டாமிருகம் என திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதனை பார்த்த ரசிகர்கள் பாபர் அசாமுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேப்டன் என்ற முறையில் இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்த கூடாது எனவுக் கூறி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்த போட்டி வருகிற 6-ந் தேதி கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம், டல்லாஸ் என்ற மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
- கால்இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்- கேஸ்பர் ரூட்டுடன் இன்று மோத இருந்தார்.
- காயத்தன்மை தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார்.
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட நடப்பு சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பிய வீரர் ஜோகோவிச் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் போராடி வெற்றிக்கனியை பறித்தார். இதனால் கால்இறுதியில் ஜோகோவிச்- கேஸ்பர் ரூட்டுடன் இன்று மோத இருந்தார்.
இந்த நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயத்தன்மை தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து நேற்று விலகினார். நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பதற்கு பட்டத்தை வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்த ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்பாக வெளியேறி விட்டதால், நம்பர் ஒன் இடத்தையும் இழக்கிறார்.
2-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஜானிக் சினெர் முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்கிறார். வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் 22 வயதான சினெர் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறுவார். டென்னிஸ் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்க போகும் முதல் இத்தாலி வீரர் இவர் தான்.
- ஒவ்வொரு அணியும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வீரர்களை கொண்டிருக்கும்.
- எதிர் பிரிவில் உள்ள 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
சென்னை:
இந்தியன் பிரீமியர் டேபிள் டென்னிஸ் லீக் என்று அழைக்கப்படும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரால் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இதுவரை 4 சீசன்கள் முடிந்துவிட்டன. 5-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யு.யு.டி.) லீக் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 7 வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இந்த சீசனில் புதிதாக 2 அணிகள் பங்கேற்கின்றன.இதன் மூலம் முதன்முறையாக 8 அணிகளுடன் டேபிள் டென்னிஸ் லீக் நடத்தப்படுகிறது.
இதில் கோவா சேலஞ்சர்ஸ், சென்னை லயன்ஸ் , தபாங் டெல்லி, யு மும்பா , புனேரி பல்தான், பெங்களூரு ஸ்மாஷர்ஸ் மற்றும் இரண்டு புதிய அணிகளான அகமதாபாத் எஸ்.ஜி பைபர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.
ஒவ்வொரு அணியும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வீரர்களை கொண்டிருக்கும்.
8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு அணியும் லீக் கட்டத்தில் 5 ஆட்டங்களில் விளையாடும். ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறைமோத வேண்டும். மேலும் எதிர் பிரிவில் உள்ள 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இந்த 2 அணிகளும் குலுக்கல் முறையில் தீர்மானிக்கப்படும்.
- என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல் ராகுல் டிராவிட்.
- நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன்.
நியூயார்க்:
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.
இந்த நிலையில் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நீடிக்க சமாதானப்படுத்த முயற்சித்தேன் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னுடைய முதல் சர்வதேச போட்டியில் ராகுல் டிராவிட்தான் கேப்டனாக இருந்தார். என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல். அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு வீரராக அவர் தனிப்பட்ட முறையில் என்ன சாதித்தார் என்பதும், பல ஆண்டுகளாக அணிக்காக அவர் என்ன செய்துள்ளார் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
ஒரு அணியாக இதைதான் செய்ய வேண்டும் என என்னிடம் முதலில் கூறியது டிராவிட் தான். நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன். குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது பயிற்சியாளராக இருக்க வற்புறுத்தினேன்.
என்று ரோகித் சர்மா கூறினார்.
இதுக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் , இந்த பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மகிழ்ச்சியாக செய்கின்றேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பார்க்க வேண்டி இருக்கிறது. தற்போது உள்ள சூழலில் நான் மீண்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
- மழையால் இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 109 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
- மீண்டும் மழை தொடர்ந்து நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
பிரிட்ஜ்டவுண்:
டி20 உலகக்கோப்பையில் நேற்று இரவு நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜார்ஜ் முன்சி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து பெய்த மழை, சில மணி நேரங்களுக்கு பின்னர் நின்றது. இதனால் முழு போட்டியையும் நடத்தாமல் 10 ஓவர்களாக கொண்ட போட்டியாக நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 109 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
எனினும், மீண்டும் மழை தொடர்ந்து நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணி எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையால் போட்டி கைவிடப்பட்டதால் அந்நாட்டு வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.
- சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன.
- 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 8-வது லீக்கில் இந்திய அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா என்று அனைத்து முன்னணி வீரர்களும் இருப்பதால் வலுவாக காணப்படுகிறது.
விராட் கோலியும், கேப்டன் ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கினால், ஆடும் லெவனில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சனை காட்டிலும் ரிஷப் பண்டுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
அயர்லாந்து சிறிய அணியாக கருதப்பட்டாலும், முந்தைய காலங்களில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறது. அதனால் அவர்களை துளி கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய வீரர்களை அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
போட்டி நடக்கும் நியூயார்க்கில் உள்ள ஆடுகளங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டவை. இந்த ஆடுகளத்தில் அதிரடி காட்டுவது அவ்வளவு எளிதல்ல. இதே மைதானத்தில் ஆடிய இலங்கை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 77 ரன்னில் அடங்கியதே அதற்கு உதாரணம். 'இங்குள்ள சூழலுக்கு ஏற்ப வீரர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது போன்ற ஆடுகளங்களில் 140 ரன் கூட வெற்றிக்குரிய ஸ்கோராக இருக்கலாம்' என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இந்த உலகக் கோப்பையுடன் பயிற்சியாளர் பணியில் இருந்து விடைபெறும் டிராவிட், உலகக் கோப்பையை வெல்வதற்குரிய வாய்ப்பை உருவாக்குவதே எங்களது இலக்கு என்றும் குறிப்பிட்டார்.
பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் ஆன்டி பால்பிர்னி, லோர்கன் டக்கர், டெக்டர், ஜார்ஜ் டாக்ரெல் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விட்டால் அதிரடியில் மிரட்டி விடுவார்கள். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து கவனத்தை ஈர்த்தனர். இதனால் அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். முடிந்த வரை 20 ஓவர் முழுமையாக ஆட முயற்சிப்பார்கள்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம்:-
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
அயர்லாந்து:
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ரோஸ் அடைர், ஆன்டி பால்பிர்னி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், மார்க் அடைர், கர்டிஸ் கேம்பர், காரெத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், கிரஹாம் ஹூமே, ஜோஷ் லிட்டில், பாரி மெக்கர்த்தி, பென் ஒயிட், கிரேக் யங்,
நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார்.
- மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப் ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.இதன் மூலம் கோகோ காப் 4-6, 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இகா ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்கெட்டா வாண்ட்ரோசோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் - கோகோ காப் மோத உள்ளனர்.
- ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.
- பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.
பாரிஸ்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.
இதில் ஜோகோவிச் 6-1, 5-7, 3-6 7-5 , 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), 7-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
5-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.
- டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது.
- இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குர்பாஸ் 76 ரன்களிலும், இப்ராஹிம் சத்ரான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.
இதன் மூலம் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்கள் குவித்தார். உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக காஸ்மாஸ் கியூட்டா மற்றும் மாசாபா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் களமிறங்கிய உகாண்டா 16 ஓவர்களில் 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
- இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் பதும் நிசாங்கா 3 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 19 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய இலங்கை வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் காமிந்து மெண்டிஸ் 11 ரன், வனிந்து ஹசரங்கா 0 ரன், சதீரா சமரவிக்ரமா 0 ரன், சரித் அசலங்கா 6 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 45 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து அனுபவ வீரர்களாக ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷனகா 9 ரன்னிலும், மேத்யூஸ் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மகேஷ் தீக்சனா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகளும், மகராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் குயிண்டன் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஹென்ரிக்ஸ் 4 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக டி காக்குடன், ஸ்டெப்ஸ் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் டி காக் 20 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து ஸ்டெப்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக கிளாசெனுடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். .
இறுதியில் கிளாசென் 19 (22) ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், நுவன் துஷாரா மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.
- டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது.
- பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்.
பிரெஞ்சு ஓபன் மற்றும் இதர டென்னிஸ் போட்டி தொடர்கள் நடத்தப்படும் விதம் சரியாக இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை கோகோ கௌஃப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் போட்டிகள் பொதுவாக நடத்தப்படும் விதம், பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் அட்டவணை என ஒட்டுமொத்த டென்னிஸ் போட்டிகளின் திட்டமிடல்களை கோகோ கௌஃப் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக நடைபெற்ற டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது, உடல்நலத்துக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார்.
"அதிகாலை 3 மணிக்கு போட்டிகளை முடிப்பது, பல சமயங்களில் நீங்கள் போட்டி முடிந்ததாக நினைக்கலாம். ஆனால் அதன் பிறகு, உங்களுக்கென சில கடமைகள் இருக்கும்- அவற்றை செய்து முடிக்க வேண்டும். இந்த பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்."
"இது உடல்நலனுக்கு நல்லது இல்லை என்றே நினைக்கிறேன். போட்டியில் தாமதமாக விளையாட வேண்டும் என்போருக்கு இது சரியாக இருக்காது, ஆனால் இது உங்களது அட்டவணையை அடியோடு மாற்றிவிடும். அதிக நேரம் கால தாமதத்துடன் போட்டியை நான் இதுவரை முடித்ததில்லை என்ற வகையில், நான் அதிர்ஷ்டசாலியாகவே கருதுகிறேன்," என்று கோகோ கௌஃப் தெரிவித்தார்.






