என் மலர்
விளையாட்டு
- சிஎஸ்கே முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை மோதுகிறது.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை 7 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. 5-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடம் தொடர்ச்சி யாக தோற்றது.
தனது 7-வது ஆட்டத்தில் லக்னோவை (5 விக்கெட்) வீழ்த்தியது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்திக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்கஸ் முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
இதற்கிடையே, சி.எஸ்.கே. எஞ்சி இருக்கும் 7 போட்டியில் 6-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும்.
இதனால் மும்பையை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அந்த அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலானது. மும்பையை மீண்டும் வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
- முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
- மதியம் 3 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மீண்டும் மோதுகின்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மோதல் இன்று பஞ்சாபின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
மதியம் 3 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 158 என்ற இலக்கை நோக்கி விளையாடுகிறது.
- மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
- 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மீண்டும் மோதுகின்றன.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மீண்டும் மோதுகின்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மோதல் இன்று பஞ்சாபின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
மதியம் 3 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்குகிறது.
- 'VVS லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என்பது முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- அப்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் இருந்தார்.
ஐதராபாத் உப்பல் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு, முன்னாள் வீரர் முகமது அசாருதின் பெயர் சூட்டப்பட்டதை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் குறைகேட்பு அதிகாரி.ரத்து செய்தார்
'VVS லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என இருந்ததை, 2019ம் ஆண்டில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் தலைமையிலான நிர்வாகக் குழு, 'முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்தது
இது அதிகார துஷ்பிரயோகம் என அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குறைகேட்பு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
- குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தியது.
- குஜராத் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
ஐ.பி.எல். போட்டியில் அகமதாபாத்தில் நேற்று நடந்த 35-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தியது.
இதன் மூலம் அந்த அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ ஆகிய 4 அணிகளும் 10 புள்ளியை தொட்டுள்ளது. நிகர ரன் ரேட் அடிப்படையில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் குஜராத் அணி மெதுவாக பந்து வீசியது. அந்த அணியில் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்கவில்லை. இதனால் 20-வது ஓவரில் அந்த அணி வெளிப்புற பகுதியில் ஒரு பீல்டரை கூடுதலாக நிறுத்தும் வாய்ப்பை பறிகொடுத்தது.
மெதுவாக பந்து வீசியதற்காக குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
- வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக விளையாடிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதுவரை நடந்த 3 ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
பஞ்சாப் 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா, பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்வி (ராஜஸ்தான், ஜதராபாத் அணியிடம்) கண்டுள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடந்த முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது. மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்த ஆட்டத்தில் பெங்களூரூவை 95 ரன்னில் கட்டுப்படுத்திய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. ஒருநாள் இடைவெளியில் இரு அணிகளும் மறுபடியும் மல்லுக்கட்டுகின்றன.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (257 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (232), நேஹல் வதேரா, பிரம்சிம்ரன் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென்னும் நல்ல நிலையில் உள்ளனர்.
பெங்களூரு 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியை (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) சந்தித்துள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (249 ரன்), பில் சால்ட் (212), கேப்டன் ரஜத் படிதார் (209), டிம் டேவிட் வலுசேர்க்கின்றனர். ஜிதேஷ் ஷர்மா, லிவிங்ஸ்டன் நல்ல பங்களிப்பை அளித்தால் மிடில் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், குருணல் பாண்ட்யா, யாஷ் தயாள் மிரட்டக்கூடியவர்கள்.
தங்களது சொந்த மைதானத்தில் அரங்கேறிய பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி அதற்கு சூட்டோடு சூடாக பதிலடி கொடுக்க பகீரத முயற்சி மேற்கொள்ளும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் பஞ்சாப்பும், 16-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் முல்லாப்பூரில் இதுவரை நடந்த 3 ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும் எனலாம்.
- வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
- வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், 14 வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்து கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஐபிஎல் தொடரில் 8 ஆம் வகுப்பு மாணவனின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக கண் விழித்தேன். என்ன ஒரு அறிமுக ஆட்டம்!" என்று பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறிக் கொண்டிருக்கிறது.
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும்.
மும்பை:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். குறைந்தது 8 வெற்றிகள் பெற்றால் தான் 'பிளே-ஆப்' சுற்றை நினைத்து பார்க்க முடியும்.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணிக்கு இந்த சீசன் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியை (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) சந்தித்துள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி அடைந்த அந்த அணி சரிவில் இருந்து மீண்டு கடைசி 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியுள்ளது.
மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் (265 ரன்), திலக் வர்மா (231), விக்கெட் கீப்பர் ரையான் ரிக்கெல்டன் (180 ரன்) உள்ளிட்டோர் பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 6 ஆட்டங்களில் ஆடி 82 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார். அவரது பேட்டில் இருந்து பெரிய இன்னிங்ஸ் வெளிப்படுமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பந்து வீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (11 விக்கெட்), டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர் நம்பிக்கை அளிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பழைய பார்முக்கு திரும்பி கொண்டிருக்கிறார். சொந்த ஊரில் ஆடுவது கூடுதல் பலமாகும்.
சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரண் அடைந்தது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. அந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 167 ரன் இலக்கை 3 பந்துகள் மீதம் வைத்து சென்னை அணி எட்டிப்பிடித்தது. புதிய தொடக்க ஜோடி ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத் ஆகியோர் அளித்த திடமான தொடக்கமும், ஷிவம் துபே, கேப்டன் டோனியின் பொறுப்பான பேட்டிங்கும் அணியை கரைசேர்த்தது.
சென்னை அணிக்கு பேட்டிங் தான் பெரும் தலைவலியாக உள்ளது. மிடில் வரிசையில் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் துடிப்பாக ரன் சேர்க்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா வலு சேர்க்கிறார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா-சாவா போன்றது என்பதால் வெற்றிக்காக வரிந்துகட்டி நிற்பார்கள்.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்த தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஒட்டுமொத்த ஐ.பி.எல்.-ல் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 20 ஆட்டங்களிலும், சென்னை 18 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் வான்கடே மைதானத்தில் 12 முறை சந்தித்ததில் மும்பை 7-5 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.
சென்னை: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், டோனி (கேப்டன்), ஜாமி ஓவர்டான், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது.
- அவருடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை பிசிசிஐ முறித்துள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரை 1-3 என இழந்தது.
இதனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. தோல்வி குறித்து பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை தேர்வாளர் அகர்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.
பின்னர் ஐபிஎல் தொடங்கியதால் ஆலோசனைக்குப் பின் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் ஆகியோரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. அவர்களுடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை முறித்துள்ளது.
இதனையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அபிஷேக் நாயர் இணைந்துள்ளார். கே.கே.ஆர். ஜெர்சியில் இருக்கும் அபிஷேக் நாயரின் புகைப்படத்தை கே.கே.ஆர். அணி பகிர்ந்துள்ளது.
இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு கே.கே.ஆர். அணியை விட்டு வெளியேறிய அபிஷேக் நாயர் மீண்டும் கே.கே.ஆர். அணியின் இணைந்துள்ளார்.
- அதிவேகமாக 200 சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுல் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
- 129 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை கேஎல் ராகுல் எட்டினார்.
ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 1 சிக்ஸ் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் வேகமாக 200 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார்.
129 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை கேஎல் ராகுல் எட்டினார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுல் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். அவர் வெறும் 69 இன்னிங்ஸ்களில் 200 சிக்சர்கள் அடித்துள்ளார். 97 இன்னிங்ஸ்களில் 200 சிக்சர்கள் அடித்த ஆண்ட்ரே ரஸல் 2 ஆம் இடத்தில உள்ளார்.
- ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்
- வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார்.
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
14 வயதில் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் அறிமுகமானதை தொடர்ந்து இணையத்தில் அவரை பற்றிய மீம்கள் வைரலாகின. குறிப்பாக 14 வயதில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று நெட்டிசன்கள் கிண்டலாக மீம் பகிர்ந்து வருகின்றனர்.
அதே சமயம் சென்னை அணியில் எடுக்கப்பட்ட திரிபாதி, ஹூடா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்காத காரணத்தால் வைபவ் சூர்யவன்ஷியுடன் அந்த வீரர்களை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.






