என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    துணை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு KKR அணியில் இணைந்தார் அபிஷேக் நாயர்
    X

    துணை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு KKR அணியில் இணைந்தார் அபிஷேக் நாயர்

    • இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது.
    • அவருடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை பிசிசிஐ முறித்துள்ளது.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரை 1-3 என இழந்தது.

    இதனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. தோல்வி குறித்து பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை தேர்வாளர் அகர்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.

    பின்னர் ஐபிஎல் தொடங்கியதால் ஆலோசனைக்குப் பின் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் ஆகியோரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. அவர்களுடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை முறித்துள்ளது.

    இதனையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அபிஷேக் நாயர் இணைந்துள்ளார். கே.கே.ஆர். ஜெர்சியில் இருக்கும் அபிஷேக் நாயரின் புகைப்படத்தை கே.கே.ஆர். அணி பகிர்ந்துள்ளது.

    இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு கே.கே.ஆர். அணியை விட்டு வெளியேறிய அபிஷேக் நாயர் மீண்டும் கே.கே.ஆர். அணியின் இணைந்துள்ளார்.

    Next Story
    ×