என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர், குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது
Byமாலை மலர்21 Sep 2019 4:44 PM GMT (Updated: 21 Sep 2019 4:44 PM GMT)
புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
ஜெய்ப்பூர்:
7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஜெய்ப்பூர் அணி முதல் பாதியின் முடிவில் 15 - 10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் குஜராத் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தனர்.
இறுதியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 28 -28 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது.
இதன்மூலம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 46 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் யுபி யோத்தா அணி தமிழ் தலைவாஸ் அணியை 42 -22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியால் யுபி யோத்தா புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X