search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    பேட்டிங்கில் ஒரு அணியாக நாங்கள் இன்னமும் சிறப்பாக இல்லை -விராட் கோலி

    இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாக உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இவை சரியான தருணத்தில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் சுவாரஸ்யம் போதவில்லை என ரசிகர்கள் பலரும் எண்ணுகின்றனர்.

    பேட்டிங் செய்யும் விராட் கோலி

    ஆனால், அப்படி இல்லை. என்னை பொறுத்தவரை 2 ஆண்டுகளில் நல்ல முறையில் போட்டிகளின் தரம் உயர்ந்துள்ளது. தனித்தனியாக வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், நாங்கள் ஒரு அணியாக இணைந்து சிறப்பான முறையில் இன்னமும் ஆடவில்லை.

    இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்திருப்பதன் மூலம் பேட்டிங் சற்று சவாலாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்த போட்டிகளில் ஒவ்வொரு முடிவும் அணியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். இதனால் பேட்டிங் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    Next Story
    ×