search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின்
    X
    அஸ்வின்

    இந்தி பேச தெரியாததால் தனிமையில் தவித்தேன்- கிரிக்கெட் வீரர் அஸ்வின் உருக்கம்

    திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் பேசும்போது, இந்தி பேச தெரியாததால் தனிமையில் தவித்தேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது விளையாட செல்லும் ஒவ்வொரு நாளும் அழுது கொண்டிருப்பேன். இந்தி எழுதவும், படிக்கவும் தெரிந்த எனக்கு பேச தெரியாது.

    இதனால் விளையாடும் போது பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் தவித்தேன். சில வீரர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என கூறுகின்றனர். வாய்ப்பு நம்மை தேடி வராது, நாம்தான் அந்த வாய்ப்பை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

    வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். பறவைகள் போல் வானத்தில் பறக்க ஆசைபட வேண்டும். இதுபோதும் என்று இருந்து விடக்கூடாது. இலக்கை தாண்டிய பயணங்களும் நம் வாழ்க்கையில் இருக்கும். அதனால் எதற்கும் கவலைப்படாமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று பேசினார்.

    Next Story
    ×