என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரோகித்-கோலி விரிசல் வலுக்கிறதா?..வீரர்களின் புகைப்படங்கள் சொல்வதென்ன?
Byமாலை மலர்2 Aug 2019 8:28 AM GMT (Updated: 2 Aug 2019 8:28 AM GMT)
ரோகித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையேயான விரிசல் குறித்த விவாதங்களை எழுப்பும் வகையில் வீரர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
மும்பை:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே பிளவு நிலவி வருவதாகவும், உலக கோப்பை போட்டி தோல்விக்கு பிறகு இந்த விரிசல் அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுடன் மூன்று 20 ஓவர் ஆட்டம், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் கலந்துக் கொள்வதற்கு முன்னர், விராட் கோலிக்கு செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் ரோகித் சர்மாவுடனான விரிசல் குறித்த கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
அதன்பின்னர் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், 'நான் அணிக்காக விளையாட வருவதில்லை. என் நாட்டுக்காக மட்டுமே' என பதிவிட்டார். இதற்கிடையே 'மியாமி பவுண்ட்' எனும் பெயரில் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தினை டுவிட்டரில் கோலி வெளியிட்டார்.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் ரோகித் மற்றும் சில வீரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதில் விராட் கோலி இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் இருவரும் இரு அணிகளாகவே பிரிந்துள்ளனர் எனவும், விரிசல் வலுக்கிறது எனவும் கூறி கமெண்ட்டுகள், டேக்குகள் செய்து இருவரையும் விளாசி வருகின்றனர்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே பிளவு நிலவி வருவதாகவும், உலக கோப்பை போட்டி தோல்விக்கு பிறகு இந்த விரிசல் அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுடன் மூன்று 20 ஓவர் ஆட்டம், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் கலந்துக் கொள்வதற்கு முன்னர், விராட் கோலிக்கு செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் ரோகித் சர்மாவுடனான விரிசல் குறித்த கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கோலி, 'ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் இடையே மோதல் நிலவுவதாக பரவிவரும் தகவல் முற்றிலும் பொய்யான செய்தி. எங்கள் இருவருக்கும் இடையே மிகவும் நல்ல உறவு நிடிக்கிறது' என கூறியிருந்தார்.
அதன்பின்னர் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், 'நான் அணிக்காக விளையாட வருவதில்லை. என் நாட்டுக்காக மட்டுமே' என பதிவிட்டார். இதற்கிடையே 'மியாமி பவுண்ட்' எனும் பெயரில் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தினை டுவிட்டரில் கோலி வெளியிட்டார்.
அதில் ரோகித் இடம்பெறவில்லை. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் விரிசல் உண்மைதான் என கூறினர். இந்நிலையில், மீண்டும் 'ஸ்க்வாட்' என பெயரிட்டு இன்று புகைப்படம் ஒன்றை கோலி வெளியிட்டுள்ளார். இதிலும் ரோகித் இடம்பெறவில்லை.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் ரோகித் மற்றும் சில வீரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதில் விராட் கோலி இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் இருவரும் இரு அணிகளாகவே பிரிந்துள்ளனர் எனவும், விரிசல் வலுக்கிறது எனவும் கூறி கமெண்ட்டுகள், டேக்குகள் செய்து இருவரையும் விளாசி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X