search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபா அபரஜித்
    X
    பாபா அபரஜித்

    டிஎன்பிஎல்: டூட்டி பேட்ரியாட்ஸ்க்கு 194 ரன்களை இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 15-வது லீக் ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ்க்கு 194 ரன்களை இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்.
    தமிழ்நாடு பிரிமீயர் கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை காஞ்சி வீரன்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது.

    டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் சிவா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் மற்றும் சித்தார்த் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விஷால் 2 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், சித்தார்துடன் ஜோடி சேர்ந்து அணியின் கேப்டன் பாபா அபரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    காஞ்சி வீரன்ஸ் அணி பேட்ஸ்மேன்

    சித்தார்த் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கிய சதிஷ் அதிரடியாக விளையாடிய 19 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 47 ரன்கள் விளாசினார். அந்த அணியின் கேப்டன் அப்ரஜித் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் விளாச, காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.

    தூத்துக்குடி தரப்பில் அந்த அணியின் வெங்கடேஷ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×