search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அணி வீரரை வீழ்த்திய மகிழ்ச்சியில் திண்டுக்கல் அணியினர்.
    X
    தூத்துக்குடி அணி வீரரை வீழ்த்திய மகிழ்ச்சியில் திண்டுக்கல் அணியினர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி

    தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    திருநெல்வேலி:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். ஹரி நிஷாந்த் 17 ரன்களும் ஜெகதீசன் 53 ரன்களும் அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் ரவி சந்திரன் அஸ்வின் 28 பந்துகளில் 3 சிக்சர்கள் உட்பட 52 ரன்கள் விளாசினார். இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

    தூத்துக்குடி அணி தரப்பில் தமிழ் குமரேசன், மூர்த்தி மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தூத்துக்குடி அணியின் தொடக்க வீரர்கள் அக்‌ஷய் ஸ்ரீனிவாசன் 16 ரன்னிலும், செந்தில் நாதன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் திண்டுக்கல் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் வீக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய தூத்துக்குடி அணியின் நாதன் அதிகபட்சமாக 38 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 

    இறுதியில் அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    திண்டுக்கல் அணி தரப்பில் ராமலிங்கம் ரோகித் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    Next Story
    ×