என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்
Byமாலை மலர்27 July 2019 11:48 AM GMT (Updated: 27 July 2019 11:48 AM GMT)
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 10-வது லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.
திருநெல்வேலி:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். ஹரி நிஷாந்த் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் 53 ரன்கள் அடித்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ரவி சந்திரன் அஸ்வின் தூத்துக்குடி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்தார். அவர் 28 பந்துகளில் 3 சிக்சர்கள் உட்பட 52 ரன்கள் விளாசினார். இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
தூத்துக்குடி அணி தரப்பில் தமிழ் குமரேசன், மூர்த்தி மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி அணி விளையாடி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X