search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷுப்மன் கில்
    X
    ஷுப்மன் கில்

    இனிமேல் இதுதான் என் ஒரே குறிக்கோள்.. -ஷுப்மன் கில் அதிரடி

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்தியா ஏ அணியின் தொடரில் ஆடிய ஷுப்மன் கில், இனி தன் நோக்கம் என்ன என்பது பற்றி கூறியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணியின் தொடரில் பிரமாதமாக ஆடியவர்தான் ஷுப்மன் கில். இவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார் என பலரால் எதிர்ப்பார்க்கப்பட்டது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அந்த 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 அரைசதங்களுடன் 218 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருது வென்ற ஷுப்மன் கில் மட்டும் இந்திய அணியிலிருந்து விடுபட்டுப் போனார்.

    அவரை தவிர மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இது குறித்து ஷுப்மன் கில் கூறியதாவது:

    ஷுப்மன் கில்

    கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்திய சீனியர் அணி அறிவிப்புக்காகக் காத்திருந்தேன். ஏதாவது ஒரு அணியிலாவது என்னைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தேர்வு செய்யப்படவில்லை என்பது எனக்கு ஏமாற்றமாகவே உள்ளது.

    ஆனால் இதையே யோசித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நான் தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டு இந்திய அணிக்கான தேர்வுக்குழுவை என் பக்கம் ஈர்ப்பேன். இதுதான் இனி எனது முக்கியமான குறிக்கோள்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடர் எனக்கு பெரிய பாடமாக அமைந்தது. நல்ல பந்துகளை தடுத்து விளையாடி கிரீசில் நீண்ட நேரம் நிற்பதன் முக்கியத்துவத்தை எனக்கு  இந்த தொடர் கற்றுக் கொடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×