என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
20 ஓவர் உலக கோப்பை வரை டோனி விளையாடுவார்- பயிற்சியாளர்
ராஞ்சி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி. 2 உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த அவரது நிலமை இன்று மிகவும் தர்மசங்கடமான நிலையில் உள்ளது.
இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டியோடு 38 வயதான டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி உள்ளார்.
உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி தோற்றதால் டோனி மீதான விமர்சனமும் அதிகமானது. இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்காதது அவர் மீதான அதிருப்தியை மேலும் அதிகமாக்கியது.
இதற்கிடையே வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் இருந்து டோனி விலகி உள்ளார். அவர் இந்திய ராணுவத்தினருடன் 2 மாத காலம் தங்கி இருப்பார். தன் மீது எழுந்துள்ள சர்ச்சையால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அதேநேரத்தில் அவர் ஓய்வு முடிவை தள்ளிவைத்துள்ளார்.
இந்தநிலையில் டோனி 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாடுவார் என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
டோனியிடம் இன்னும் கிரிக்கெட் திறமை இருக்கிறது. இது எனக்கு தெரியும். சர்வதேச போட்டியில் விளையாடக்கூடிய அளவுக்கு அவர் போதுமான உடல் தகுதியுடன் இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை வரை டோனியால்தொடர்ந்து விளையாட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்