என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்பின்னர்களுக்கு எதிராக இத்தனை தற்காப்பா? -விமர்சித்த சேவாக்
Byமாலை மலர்28 Jun 2019 3:16 AM GMT (Updated: 28 Jun 2019 8:04 AM GMT)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இத்தனை தற்காப்பா? என இந்திய அணி வீரர்களை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.
உலக கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. இதில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முதலில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரஷித் கான், முதல் 4 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்தார். அடுத்த 6 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்தது.
டோனி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டும், காட்ரெல் மற்றும் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முதலில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்னும், நிகோலஸ் பூரன் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Rashid Khan had gone for 25 in 4 overs , gave away only 13 in his next 6 and today Fabian Allen had given 34 in 5 overs, only 18 in next 5. Can't be so defensive against the spinners.
— Virender Sehwag (@virendersehwag) June 27, 2019
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரஷித் கான், முதல் 4 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்தார். அடுத்த 6 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
பின்னர் ஆலன், முதல் 5 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்தார். ஆனால், கடைசி ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் இத்தனை தற்காப்பா?’ என பதிவிட்டு இந்திய அணியை விமர்சித்துள்ளார்.
சேவாக் கூறிய இரண்டு ஸ்பின்னர்களின் ஓவர்களையும், பின்னால் எதிர்கொண்டது டோனிதான். இதனால் அவர் டோனியை தான் மறைமுகமாக விமர்சிக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட்களில் கூறி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X