என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி
Byமாலை மலர்24 Jun 2019 5:28 PM GMT (Updated: 24 Jun 2019 5:28 PM GMT)
உலகக்கோப்பை கிரிகெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அணி அபார வெற்றி பெற்றது.
வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பதின் நைப் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தாஸ் 16 ரன்னிலும், தமிம் இக்பால் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசனும், முஷ்பிகுர் ரஹிமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷாகிப் அல் ஹசன் 51 ரன்களும், ரஹிம் 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொசாடெக் ஹொசைன் 24 பந்தில் 35 ரன்களும், மெஹ்முதுல்லா 38 பந்தில் 27 ரன்களும் அடிக்க வங்காள தேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், குல்பதின் நைப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 263 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் குல்படின் நைப் 47 ரன்களும் ரஹ்மத் ஷா 24 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தினை ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஷின்வாரி 49 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 47 வது ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்காளதேசம் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்காளதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X