என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம்- விராட் கோலி நம்பிக்கை
Byமாலை மலர்15 Jun 2019 1:07 PM GMT (Updated: 15 Jun 2019 1:07 PM GMT)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டன்:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை மேன்செஸ்டரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
இதுவரை விளையாடிய 3 லீக் ஆட்டங்களில் இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதேபோல் இதுவரை 4 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 1 வெற்றி, 2 தோல்வி அடைந்து, புள்ளிபட்டியலில் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பாகிஸ்தானுடனான போட்டி மட்டுமல்ல, எங்களை பொறுத்தவரை அனைத்து போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம். நன்றாக கிரிக்கெட் விளையாடுவதால் தான், நாங்கள் உலகின் தலைசிறந்த அணியாக திகழ்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X