search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்ப்யூட்டரை விட எம்எஸ் டோனி வேகமானவர்: சோயிப் அக்தர் புகழாரம்
    X

    கம்ப்யூட்டரை விட எம்எஸ் டோனி வேகமானவர்: சோயிப் அக்தர் புகழாரம்

    ஆடுகளத்தை கம்ப்யூட்டர் கணிப்பதைவிட எம்எஸ் டோனி விரைவாக கணிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கியவர் எம்எஸ் டோனி. விக்கெட் கீப்பரான இவர், ஆடுகளத்தை கணிப்பதில் வல்லவர். இதனால் எம்எஸ் டோனியை எல்லோரும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், கம்ப்யூட்டரை விட எம்எஸ் டோனி வேகமானவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘குறிப்பிட்ட மைதானத்தின் ஆடுகளத்தின் தன்மையை குறித்து எந்த வகையான கம்ப்யூட்டர் கணித்து கூறினாலும், அதைவிட வேகமாக டோனியால் செய்ய முடியும் என்பதை நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், ‘‘கேஎல் ராகுலை ஒரு கிரிக்கெட்டராக நான் விரும்புகிறேன். விராட் கோலியின் இடத்தை நிரப்பி, வருங்காலத்தில் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக மாறுவார் என்று நினைக்கிறேன்’’ என்றும் டுவிட் செய்துள்ளார்.
    Next Story
    ×